Friday, December 26, 2008

பப்பாளி பழத்துக்குள் மனிதக் கரு வடிவம் !

தண்டையார்பேட்டை வ.உ.சி. நகரை சேர்ந்தவர் ஞானப்பிரகாசம். தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன் தினம் மார்க்கெட்டில் பப்பாளி பழம் வாங்கி வந்தார். வீட்டில் வந்து அதை அறுத்த போது, விதை இருக்க வேண்டிய பகுதியில் மனித கருவைப் போன்ற தோற்றம் இருந்தது. பக்கத்து வீட்டுக்காரர்களும் அதை ஆச்சர்யத்துடன் பார்த்தனர். அந்த தெரு மக்களும் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்துச் சென்றனர். நெரிசல் அதிகமானதால், போலீசார் வந்து பப்பாளிப் பழத்தை ஸ்டேஷனுக்கு எடுத்துச் சென்றனர்.

0 comments: