Friday, August 28, 2009

தீர்ப்புக்களின் கொடுமை தாங்காமலா நீதிமன்ற கட்டிடம் உடைந்து விழுந்தது?

கொழும்பில் அமைந்துள்ள உயர்நீதிமன்ற கட்டிடம்
கடந்த இரவு 8.30 மணியளவில் உடைந்து விழுந்துள்ளது.
இந்த கட்டிடம் 100 வருடம் பழமை வாயந்தது எனவும்
அதனாலேயே இடிந்த விழுந்துள்ளதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே பகுதிகளில் உள்ள பிற சில கட்டிடங்கள் புதிதாக செப்பனிடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இடிப்பு சம்பவத்தில் எவரும் காயப்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது

Wednesday, August 26, 2009

இலங்கை இனப்படுகொலை அம்பலம்


தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து நாட்டை மீட்டு விட்டோம் என்று சிறீலங்கா அரசாங்கம் அறிவித்து மூன்று மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், வெளிவந்துள்ள காணொளியானது சிறீலங்காப் படையினரிடம் அகப்பட்டுள்ள தமிழர்களை சிறீலங்கா அரசாங்கம் படுகொலை செய்கின்றது என்பதை உறுதி செய்துள்ளது.

தமிழ் இளைஞர்கள் மிகக் கொடூரமான முறையில் சித்திரவதைக்குள் உள்ளாக்கப்பட்டு, ஆடைகள் களையப்பட்டு, கண்கள், கைகள் கட்டப்பட்ட நிலையில் தரைவெளி ஒன்றுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். பின்னர் சிறீலங்காப் படையினர் குறிந்த இளைஞர்களைக் கேலி செய்து சிரிப்பதோடு, மூடுகாலணிகளால் உதைந்து அவர்களைக் சுட்டுச் கொன்றுள்ளனர்.

காணொளியில் ஒன்பது இளைஞர்களை சிறீலங்காப் படையினர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இப்படுகொலைக் காணொளியானது சிறீலங்கா இராணுவச் சிப்பாய் ஒருவரிடம் இருந்து பெறப்பட்டுள்ளது.

Tuesday, August 18, 2009

ஒரு அதிர்ச்சி விடியோ

Sunday, August 16, 2009

கருணாவுக்கு செருப்படி