Tuesday, October 28, 2008

அமைதியான வாழ்க்கைக்கு ஆழ்ந்த தூக்கம்!

பகலில் நாம் சுறுசுறுப்பாக வேலைபார்ப்பதை இரவு தூக்கம் தான் தீர்மானிக்கிறது.சரியான தூக்கம் இல்லை என்னும் போது நமது அன்றாட பணிகள் பாதிப்படைகின்றன.சராசரியாக ஒருநாளைக்கு ஏழரை மணி நேரமாவது தூங்க வேண்டும்.எனினும் இந்த அளவு நபருக்கு நபர் மாறுபடுகிறது.பொதுவாக இந்தியர்கள் நள்ளிரவுக்கு பின் தான் தூங்கச்செல்கின்றனர். 61 சதவீதம் பேருக்கு 7மணிநேர தூக்கம் கூட இல்லை.பெரும் பாலும் தூக்கமின்மைக்கு காரணமாக கூறப்படுவது பணிச்சுமையே. பி.பி.ஓ.,நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் சரியான நேரத்துக்கு தூங்கச்செல்வதில்லை. இரவில் "டிவி" பார்ப்பதால் பலருக்கு படுக்கைக்கு சென்ற பின்னரும் தூக்கம் வருவதில்லை.நோய் எதிர்ப்புசக்தியை அதிகரித்துக்கொள்ள முடியாது:உடல்நலத்தை பாதுகாப்பதில் தூக்கம் முக்கிய பங்காற்றுகிறது.தூக்கமின்மையால் இதய நோய்,பக்கவாதம்,உடல் பருமனாதல்,நீரிழிவு நோய்,மன அழுத்தம் போன்றவை வரலாம்.நோய் எதிர்ப்பு செல்கள் எலும்பு மஜ்ஜையில் உருவாகின்றன.தூங்கும் போது தான் இவற்றின் உற்பத்தி நடைபெறுகிறது.வைரஸ்,பாக்டீரியா போன்றவற்றின் தாக்குதல்களில் இருந்து மட்டுமின்றி கேன்சரில் இருந்தும் பாதுகாக்க இந்த நோய் எதிர்ப்பு செல்கள் அவசியம்.குறைவாக தூங்குபவர்கள் அதிகம் உடற் பயிற்சி செய்வதினாலோ,நன்கு சாப்பிடுவதாலோ நோய் எதிர்ப்புசக்தியை அதிகரித்துக்கொள்ள முடியாது.தூக்கமின்றி ஒருநாள் முழுவதுமாக செலவிட்டால் நோய் எதிர்ப்பு செல்களின் எண்ணிக்கை 37சதவீதம் வரை குறைவதாக கண்டறிந்துள்ளனர்.குறைவாக தூங்குபவர்களுக்கு இதயம் தொடர்பான பிரச்னைகள் விரைவில் ஏற்படும்.உடலில் உள்ள சுரப்பிகளையும் இது பாதிக்கிறது.அடிக்கடி பசியுணர்வை தூண்டுவதால்,அதிகம் சாப்பிட நேரிடுகிறது. உடல் பருமனாவதுடன்,சர்க்கரை நோய்க்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது. மூளையில் உள்ள வேதிப்பொருட்கள் சரியாக செயல்படவும்,மன அழுத்தம்,கோபம்,தேவையில்லாத துக்க உணர்ச்சி போன்றவற்றை தடுக்க தூக்கம் அவசியம்.அமைதியான,இருட்டான சூழலே தூங்குவதற்கு ஏற்றது.ஒவ்வொரு நாளும் இரவு 10மணிக்கு தூங்கி,காலை 5.30க்கு விழிப்பதை வழக்கமாக கொள்ளவும்.தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்னதாகவே இரவு உணவை முடித்துக்கொள்ளவும்.தூங்கச் செல்வதற்கு முன் டீ,காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும்.உடற்பயிற்சி,தினமும் 4 கி.மீ.,நடைப்பயிற்சி செய்வதை வழக்கமாக கொள்ளவும். தொடர்ந்து "யோகா" செய்பவர்களுக்கு தூக்கம் நன்றாக வரும்.தினமும் படுக்கைக்கு செல்வதற்கு முன் புத்தகம்,செய்தித்தாள் படிப்பது,பால் குடிப்பது என ஏதாவது ஒரு பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளலாம்.இரண்டு வாரங்களுக்கு மேலாக தூக்கமின்மை பிரச்னை நீடித்தால் டாக்டரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்

எடை குறைப்பு மாத்திரைகளால் உயிருக்கு ஆபத்து

நவீன வாழ்க்கை முறை, உணவுப்பழக்க வழக்கம், உடற்பயிற்சி செய்யாதது போன்ற காரணங்களால் எடை அதிகரித்து உடல் குண்டாகிறது. இங்கிலாந்து நாட்டில் மட்டும் 97 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் குண்டு உடலை சுமக்க முடியாமல் நடக்கிறார்கள்.குண்டு உடலை குறைக்க விரும்பும் இவர்கள் கடைகளில் கிடைக்கும் மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டு எடையை குறைக்கிறார்கள். இது போன்ற உடல் எடை குறைப்பு மாத்திரைகள் அபாயகரமானது என்று இங்கிலாந்து டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.ரிமோனாபென்ட் அல்லது அக்கம்பிளியா போன்ற மாத்திரைகளை பயன் படுத்துகிறவர்களுக்கு மன அழுத்தம், மனநல பாதிப்பு போன்றவை ஏற்பட வாய்ப்பு உள்ளது. அது மட்டுமல்ல இது போன்ற மாத்திரைகளை பயன்படுத்துகிறவர்களை தற்கொலைக்கும் துண்டிவிட வாய்ப்பு உள்ளது என்றும் டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.இப்போது அந்த மாத்திரைகளுக்கு டாக்டர்கள் தடை விதித்துள்ளனர்.

Sunday, October 26, 2008

கருணாநிதி இராஜினாமா வாபஸ்

இலங்கை அதிபரின் தூதர் புதுடெல்லியில் சந்தித்து பேசியதை தொடர்ந்து, வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று மாலை முதலமைச்சர் கருணாநிதியை சந்திக்க சென்னை வருகிறார். இதனைத் தொடர்ந்து திமுக எம்.பி.க்களின் இருவார கால ராஜினாமா நாடகம் முடிவுக்கு வருகிறது.
இலங்கையில் கிளிநொச்சி பகுதியில் இராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது. இதில் அப்பாவி தமிழர்கள் ஏராளமாக கொல்லப்படுகின்றனர். ஆயிரக் கணக்கானோர் வீடுகளை இழந்து காடுகளில் தங்கியிருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. தமிழர்களின் இந்த நிலையை கண்டித்து தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. கடந்த 14ந் தேதி தமிழக அரசு கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டத்தில், இலங்கையில் போர் நிறுத்தம் அறிவிக்க வேண்டும் என்றும், தமிழர்கள் பாதிக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசு இலங்கை பிரச்சனையில் தலையிட்டு, இரண்டு வார காலத்தில் அமைதியை ஏற்படுத்த வலியுறுத்தி தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒட்டுமொத்தமாக இராஜினாமா செய்வது என்றும் மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து, திமுகவைச் சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் பின்தேதியிட்டு தங்கள் இராஜினாமா கடிதங்களை கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான கருணாநிதியிடம் அளித்தனர். இதற்கிடையே, பிரதமர் மன்மோகன் சிங் கருணாநிதியை தொடர்பு கொண்டு இலங்கை பிரச்சனையில் தமிழர்கள் பாதிக்கப்படக்கூடாது என அந்நாட்டு அரசுக்கு அறிவுறுத்தப்படும் என உறுதி அளித்திருந்தார். இதன்படி, கடந்த வாரம் பிரதமர் மன்மோகன் சிங்கை தொடர்பு கொண்ட இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே, விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையில் தமிழர்கள் சிறிது அளவு கூட பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்வோம் என்று வாக்குறுதி அளித்திருந்தார். இலங்கை அரசிடம் கூடுதல் விவரங்களை இந்திய அரசு அப்போது கேட்டது. இதைத் தொடர்ந்து, தமிழர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு உணவு, உடை, மருந்து பொருட்கள் அனுப்ப தடைவிதித்திருந்த இலங்கை அரசு, ஐநா சபையின் நிவாரண பொருட்களை கொண்டு சென்ற கப்பல்களுக்கு தடையை நீக்கியது. இதைத் தொடர்ந்து, இலங்கை தமிழர்களுக்கு உணவுப் பொருட்களும், மருந்து, உடை உள்ளிட்ட நிவாரண உதவிகளும் வினியோகிக்கப்பட்டன. இலங்கை நிலவரம் தொடர்பாக இந்திய அரசுக்கு விளக்கம் அளிப்பதற்காக இலங்கை அதிபர் ராஜபக்சே தனது சகோதரரும், சிறப்பு பாதுகாப்பு ஆலோசகருமான பசில் ராஜபக்சேயை புதுடெல்லிக்கு அனுப்பி வைத்துள்ளார். புதுடெல்லி வந்துள்ள பசில் ராஜபக்சே, அங்கு வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து, அதிபர் ராஜபக்சே எழுதியுள்ள கடிதத்தை அளித்ததாக கூறப்படுகிறது. மேலும், தமிழர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளப்படும் என அவர் வாக்குறுதி அளித்ததாக கூறப்படுகிறது. இந்திய அரசு இலங்கை தமிழர்களுக்கு வழங்கும் மருந்து பொருட்கள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை ஏற்றுக் கொள்ளவும் அந்நாட்டு அரசு ஒப்புக் கொண்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சண்டையால் இடம்பெயர்ந்த இரண்டரை இலட்சம் அகதிகளுக்கு, இருப்பிட வசதி செய்து கொடுக்க இலங்கை அரசு இசைவு தெரிவித்து உள்ளது என்றும், தமிழர்களின் நலனை பாதுகாக்க வாக்குறுதி அளித்துள்ளது என்றும், இந்த விவரங்களை பசில் ராஜபக்சே இந்திய அரசிடம் தெரிவித்தார் என்றும் கூறப்படுகிறது. பிரணாப் முகர்ஜியுடன் நடத்திய பேச்சுக்களுக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பசில் ராஜபக்சே, இலங்கை தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இலங்கை அரசு முன்னுரிமை அளிக்கும் என்று அவர் தெரிவித்தார். இது தொடர்பாக கூட்டு அறிக்கை ஒன்று இன்று மாலை வெளியிடப்படும் என்றும், இது குறித்து மேலும் ஒரு சுற்று பேச்சு நடைபெறும் என்றும் அவர் கூறினார். முன்னதாக இலங்கை அதிபரின் தூதர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், வெளியுறவு செயலர் சிவசங்கர் மேனன் ஆகியோரை சந்தித்து பேச்சுக்கள் நடத்தினார். இலங்கை தூதர் தன்னுடன் நடத்திய பேச்சுக்களின் விவரங்களை எடுத்துக் கூறுவதற்காக பிரணாப் முகர்ஜி இன்று மாலை சென்னைக்கு வருகிறார். இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: இலங்கை தமிழர் பிரச்சனை குறித்து தமிழக முதலமைச்சர் கருணாநிதியுடன் இன்று மாலையில் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி சென்னை வருகிறார். இன்று மாலை 5 மணியளவில் மத்திய அமைச்சரும், தமிழக முதல்வரும் சந்திக்க இருக்கிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த சந்திப்பையடுத்து, இலங்கை தமிழர் பாதுகாப்புக்காக மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் திருப்தி அளிப்பதாக கூறி திமுக தனது எம்.பி.க்களின் இராஜினாமாவை விலக்கிக் கொள்ளும் என்றும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. முதல்வருடன் சோனியா பேச்சு இலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் கருணாநிதியிடம், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விளக்கி உள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் வழிகாட்டு தலைவரும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சோனியா காந்தி இன்று பகல் 12 மணியளவில் முதலமைச்சர் கருணாநிதியை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு உரையாடினார். அப்போது இலங்கை பிரச்சனை குறித்தும் தற்போதுள்ள சூழ்நிலைகள் குறித்தும் மத்திய அரசு எடுத்து வருகின்ற நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சரிடம் கூறியதோடு, இன்று பிற்பகலில் மேலும் அது பற்றி விரிவாக பேசுவதற்காக வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை அனுப்பவிருப்பதாகவும் தெரிவித்தார். சோனியாவுக்கும்,பிரதமருக்கும் வெளியுறவுத்துறை அமைச்சருக்கும், இலங்கை பிரச்சனையில் இந்திய அரசு எடுத்து வரும் முயற்சிகளுக்காக தமிழ் மக்களின் சார்பில் தனது நன்றியை முதலமைச்சர் தெரிவித்துக் கொண்டார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சோனியா-முகர்ஜியுடன் பாலு சந்திப்பு:முன்னதாக இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன் மத்திய தரைவழிப் போக்குவரத்துத்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு நேற்றிரவு சந்தித்துப் பேசினார்.வரும் 28ம் தேதிக்குள் இலங்கையில் போரை நிறுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழக எம்பிக்கள் அனைவரும் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ள நிலையில் இந்தச் சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.இலங்கை குழுவிடம் முகர்ஜி பேச வேண்டிய விஷயங்கள் என்று கூறி முதல்வர் கருணாநிதி தெரிவித்த யோசனைகளையும் பாலு முன் வைத்ததாகத் தெரிகிறது.மேலும் இலங்கை பிரச்சினை தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர்கள் தன்னிச்சையாக கருத்து தெரிவித்து வருவதைத் தடுக்க வேண்டும் என்றும் சோனியாவிடம் பாலு கோரியதாகத் தெரிகிறது.பின்னர் பிரணாப் முகர்ஜியையும் சந்தித்த பாலு, இலங்கை விஷயத்தில் மத்திய அரசு கடுமையாக நடந்து கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

Friday, October 24, 2008

அமெரிக்க டாலருக்கு விலைபோன குரங்குகள்!

தற்போதைய அமெரிக்கப் பொருளாதார வீழ்ச்சி குறித்து பலரும் பல்வேறுவிதமாக விளக்குகிறார்கள். கழுத்தில் மட்டுமே டாலரைத் தொங்கவிட்டிருக்கும் பாமரர்கள் புரிந்து கொள்வதற்காக எளிய விளக்கம்:பல வருடங்களுக்கு முன்பு,குரங்குகளுக்கு விலையாக US$ கொடுக்கப்படும் என்று கிராமங்களில் விளம்பரப்படுத்தப் பட்டது. காடுகளில் சும்மா சுற்றித் திரியும் குரங்குகளுக்கு இவ்வளவு விலையா என்று வாய்பிளந்த கிராமவாசிகள்,குரங்களைப் பிடித்து அமெரிக்க டாலருக்கு விற்க முன்வந்தனர்.அமெரிக்க டாலர்மீது கிராமவாசிகளுக்கு இவ்வளவு மோகமா என்று வியந்து 1000 குரங்குகளுக்கு 10 US$ என்று விலை நிர்ணயித்தான். சும்மாக் கிடைக்கும் குரங்குகளுக்கு எவ்வளவு US டாலர் கிடைத்தாலும் லாபம்தானே என்று கிராமவாசிகளும் ஆயிரக்கணக்கில் உள்ளூர் குரங்குகளை அமெரிக்க டாலருக்கு விற்று கொள்ளை லாபம் பார்த்தனர்.ஊரெல்லாம் குரங்குக்கு டாலர் பற்றிய பேச்சுதான்! இதைக் கேள்விப்பட்ட பதினெட்டுப் பட்டி கிராமவாசிகளும் குரங்குகளைப் அமெரிக்க டாலருக்கு விற்க முன்வந்தனர். உள்ளூர் குரங்குகளை எல்லாம் அந்தந்தக் கிராமவாசிகள் பிடித்து ஏற்கனவே விற்றுவிட்டதால் குரங்குகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. கிராமத்தினரும் குரங்குகள் கிடைக்காததால் குரங்கு வர்த்தகத்தை நிறுத்தி வைத்தனர்.கனிசமான குரங்குகள் இருப்பில் இருந்தாலும் கிராமங்களில் குரங்குகளுக்கான தேவை மிதமிஞ்சி அதிகரித்ததால் ஆயிரம் குரங்குகளுக்கு இருபது டாலர் கொடுக்கப்படும் என்று அறிவித்தான்.ஆஹா! இருமடங்கு விலையா என்று கிராமத்தினரும் வாய்பிளந்து அக்கம்பக்கக் காடுகளுக்குச் சென்று குரங்குகளைப் பிடித்து விற்றனர். எல்லா கிராமத்திலும் இதே நிலை ஏற்பட்டதால் மீண்டும் குரங்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, குரங்கு வர்த்தகம் டல்லடித்து!அடுத்ததாக, ஆயிரம் குரங்குகளுக்கு 25 US$ என்று விலை நிர்ணயித்தான். மீண்டும் குரங்கு வேட்டை சூடுபிடித்தாலும் ஒரு குரங்குகூட கிடைக்கவில்லை.கிராமவாசிகளும் அமெரிக்கடாலருக்குக் குரங்கு விற்பதைக் கைவிட்டு அவரவர் பிழைப்பை பார்க்கத் தொடங்கினர்.உலகம் முழுதும் குரங்குகளுக்கான தேவை அதிகரித்ததால், ஆயிரம் குரங்குக்கு 50US$ என்ற புதிய அறிவிப்புச் செய்யப்பட்டது. இதர்கிடையில் குரங்குக் கொள்முதல் செய்பவனுக்குச் சில தவிர்க்க முடியாத வேலைகள் இருந்ததால் தனது சார்பில் குரங்குகளை வாங்க ஒரு உதவியாளரையும் நியமித்து வேறுவேலைகளைக் கவனிக்கச் சென்று விட்டான்.இதைப் பயன்படுத்தி லாபம் பார்க்க நினைத்த உதவியாளன்,கிராமத்துக் குரங்கு வியாபாரிகளிடம் தன் முதலாளி ஏற்கனவே வாங்கி, தனீடம் விட்டுச் சென்றுள்ள குரங்குகளை ஆயிரம் குரங்குகள் 35US$ என்ற விலைக்கு, குரங்குகள் கிடைக்காமல் தவிக்கும் கிராமத்தினரிடமே மீண்டும் விற்க முன்வந்தான். தனது முதலாளி சிலநாட்கள் கழித்து மீண்டும் வந்த பிறகு பழையபடி ஆயிரம் குரங்குகளுக்கு 50 US$ வீதம் விற்கலாம் என்று ஆசை காட்டினான்.தங்களிடமிருந்த சேமிப்புகளை எல்லாம் விற்று அமெரிக்க டாலராக்கி 1000 குரங்குகளுக்கு 35 US$ வீதம் உதவியாளரிடம் கிராமவாசிகள் வாங்கத் தொடங்கினர். பழையபடி அமெரிக்கன் குரங்குகள் வாங்க மீண்டும் வருவார், தங்களிடமிருக்கும் குரங்குகளை நல்லவிலைக்கு விற்கலாமென்று எதிர் பார்த்து எல்லாக் கிராமவாசிகளும் காத்திருந்தனர். ஆனால் குரங்கு வாங்குபவரோ அல்லது அவரது உதவியாளரோ வரவே இல்லை. திடீரென்று ஒருநாள் குரங்கு வாங்க/விற்க பணமில்லை என்பதால் உதவியாளர் திவால் ஆகிவிட்டதாக அறிவிக்கப்பட்டது. எல்லோரிடமும் அளவுக்கு அதிகமான குரங்குகள் மட்டுமே மிஞ்சி இருக்கின்றன.குரங்கு வர்த்தகம் சந்தை நிலவர அபாயங்களுக்கு உட்பட்டது என்று மெதுவாகச் சொல்லியபோதும் கிராமவாசிகள் துணிந்து குரங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டார்கள். அமெரிக்க டாலருக்கு குரங்கு வாங்க ஆளில்லாதக் காரணத்தால் சிலர் யூரோவுக்கு விற்கத் தொடங்கியுள்ளார்கள். எனவே, இனிமேல் யாரும் தயவு செய்து அமெரிக்க டாலருக்குக் குரங்கு வாங்க/விற்க கனவிலும் நினைக்காதீர்கள்!

உலக கண்ணழகி ஐஸ்!


உலகிலேயே கவர்ச்சியான கண்ணழகி என்ற பெருமையைப் பெற்றுள்ளார் முன்னாள் உலக அழகியும், இந்நாள் நம்பர் ஒன் நடிகையுமான ஐஸ்வர்யாராய் பச்சன்.

இந்திய அழகின் பிரதிநிதியாக உலகமெங்கும் உலா வந்து கொண்டிருப்பவர் ஐஸ்வர்யா ராய்.

'இந்திய சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அடுத்து உலகமெங்கும் அதிக ரசிகர்களைக் கொண்டுள்ள இந்தியக் கலைஞர் இவர் மட்டும்தான்' என்கிறது ஆசியா வீக் பத்திரிகை. இவரது மாமனார் அமிதாப்புக்குக் கூட அடுத்த இடம்தான் (நடிப்பில் அல்ல... பாப்புலாரிட்டியில்!)

உலக அழகி பட்டம் பெற்ற பின்னர் திரையுலகில் நுழைந்து பல வெற்றிப் படங்களில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராயின் கண்கள் தான் உலகிலேயே மிகவும் கவர்ச்சியான கண்கள் அறிவித்துள்ளது யுஎஸ் டிவி நிறுவனம்.

இந்த நிறுவனம் சமீபத்தில் உலகிலேயே கவர்ச்சியான உடல் பாகங்கள் கொண்டவர்கள் யார் என்று வாக்கெடுப்பினை நடத்தியது.

இதில் பார்ப்பவர்களை வசீகரிக்கும் கவர்ச்சியான கண்களைக் கொண்டவர் என்ற பிரிவில் ஐஸ்வர்யா ராய் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

பிரபல ஹாலிவுட் நடிகைகள் ஏஞ்சலினா ஜூலி, மேகன் பாக்ஸ், ஸ்கார்லெட் ஜோகன்சன் ஆகியோரது கண்களை விட கவர்ச்சியாக உள்ளது ஐஸ்வர்யாவின் என்று பிரபலங்கள் பலரும் பாராட்டியுள்ளனர்.

கவர்ச்சியான கால்களுக்குச் சொந்தக்காரர் என்ற பட்டத்தை பிரேசில் நாட்டின் மாடல் அழகி கிசிலி பண்ட்சென்னுக்கு அளித்துள்ளனர் இந்த டிவியின் பார்வையாளர்கள்.

தைவான் நாட்டின் ஷூ கி, ஏஞ்சலினா ஜூலியை விட கவர்ச்சியான உதட்டுகளைக் கொண்டவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

சாதித்தார் சச்சின்

கிரிக்கட்உலகின்சாதனைகள் பலவற்றின் சொந்தக்காரர் சச்சின். சச்சின் என்றால் கிரிக்கட் வீரர் என்பதனை விட சாதனைகளின் சொந்தக்கார் என்றும் கூறலாம். கிரிக்கட் உலகின் பிதா மகன் டொன் பிரட்மன் பாராட்டிய வீரர்களில் சச்சினும் ஒருவர்.

உலகின் பிரபலமான பந்து வீச்சாளர்கள் அனைவரும் சச்சினுக்கு பந்து வீசுவது கடினம் என்று ஒரே குரவில் உரத்துக் கூறியுள்ளனர். ரன் குவிக்கும் மிஷின் என்று புகழ்ந்து பேசப்படும் சச்சினின் திறமையை குறைத்து மதிப்பிட முடியாது சாதனைகளைத் தொடுவது அவருக்கு கைவந்த கலை.

துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கும் சச்சின் பந்து வீச்சிலும் எதிரணியின் வெற்றியை தட்டிப் பறித்தார். எதிர்பாராத வேளையில் எதிரணி வீரர்களின் முக்கியமான விக்கட்டை சச்சின் வீழ்த்தியதால் வெற்றி பெற வேண்டிய அணிகள் தோல்வியடைந்தன.

வாய்ச் சவாடல் பேசி தனது வீரத்தை சச்சின் காட்டியதில்லை. தன் மீது வீசப்படும் விமர்சனக் கணைகளை துடுப்பு மூலம் தடுத்து விடுவது அவரது பாணி. டெஸ்ட் போட்டியில் அதிக ஓட்டங்களை குவித்த லாராவின் ஓட்ட எண்ணிக்கையை இலங்கையில் சச்சின் முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இலங்கையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் எவரும் சோபிக்கவில்லை. சச்சினும் அதற்கு விதிவிலக்கல்ல. சச்சினின் உடல் நிலை அவருக்கு ஒத்துழைக்க மறுக்கிறது. விளையாடுவதற்குரிய உடல் நிலை இல்லாமையினால் போட்டிகளைத் தவிர்த்து வருகிறார்.

எதிரணி வீரரால் அதிகம் குறி வைக்கப்படும் வீரராக சச்சின் உள்ளார். சச்சினுக்கு எப்படிப் பந்து வீசினால் அவர் அவுட்டாவார் என்று தெரிந்து வைத்திருக்கும் பந்து வீச்சாளர்கள் அவரைக் குறி வைத்து பயிற்சி செய்வார்கள். பந்து வீச்சாளர்களின் எதிர்பார்ப்பை பல சந்தர்ப்பங்களில் சச்சின் தவிடு பொடியாக்கியுள்ளார்.

சச்சினின் விக்கட்டை வீழ்த்தினால் உலக சாதனை செய்தது போல் பந்து வீச்சாளர்கள் துள்ளிக் குதிப்பார்கள்.

அணியில் அறிமுகமாகும் புதிய பந்து வீச்சாளர்களுக்கு சச்சின் மீது ஒருதலைக் காதல் பிறந்து விடுகிறது. சச்சினின் விக்கட்டை வீழ்த்த வேண்டும் என்று பத்திரிகைகளுக்கு பேட்டியளிப்பார்கள். அவர்களின் பந்து வீச்சு சச்சின் வீழ்ந்தால் பிறவிப் பயனடைந்தது போல் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்று விடுவார்கள்.

லாராவின் சாதனையை முறியடித்து 12 ஆயிரம் ஓட்டங்களை கடந்து விட்டார் சச்சின். அவரது சாதனையை முறியடிக்கும் சந்தர்ப்பம் டிராவிட், பொண்டிங் ஆகிய இரண்டு வீரர்களுக்கு உள்ளது. டிராவிட் தொடர்ந்து விளையாடுவாõ என்ற சந்தேகம் உள்ளது. சச்சினின் சாதனையை முறியடிக்கும் வரை பொண்டிங் விளையாடுவாரா என்ற சந்தேகம் உள்ளது.

அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆபிரிக்க வீரர்கள் சிறப்பாக விளையாடும் போது ஓய்வை அறிவித்து விடுவார்கள். அவர்களின் ஆட்டத்திறன் மங்கிவிட்டால் அணியில் இருந்து தூக்கியெறிப்படுவார்கள். 2011 ஆம் ஆண்டுவரை விளையாடப் போவதாக சச்சின் அறிவித்துள்ளார். 2011 ஆம் ஆண்டுவரை டெஸ்ட் பேட்டிகளிலும் சச்சின் விளையாடினால் அவரின் சாதனையை இப்போதைக்கு யாராலும் முறியடிக்க முடியாது.

வானதி

நன்றி:மெட்ரோ

சீமான், அமீர் கைதை கண்டித்து நாளை திரைப்படங்கள் அனைத்தும் ரத்து (ஓடியோ செய்தி இணைப்பு)

குரல்வழிச்செய்தி இணைப்பு - தமிழின உணர்வாளரும், திரைப்பட இயக்குனருமான சீமான் சற்றுமுன்னர் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து தமிழக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று தமிழகம் முழுவதும் ஈழத்தமிழருக்கு ஆதரவாக நடைபெற்ற மனிதச்சங்கிலி போராட்டத்தில் கலந்துகொண்டு வீடு திரும்பிய சமயத்திலேயே, வீட்டில் வைத்து இக்கைது நடைபெற்றிருப்பதாக அறியமுடிகிறது. சீமான், மற்றும் அமீர் ஆகியோரின் கைதை கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் உள்ள அணைத்து திரையரங்குகளும்
மூடப்படவுள்ளதாகவும், திரைப்படக்காட்சிகள் அணைத்தும் ரத்தாகும் எனவும் அறியமுடிகிறது! நாளை காலை 9 மணியளவில், avm studio விற்கு முன்னால் திரையுலகக்கலைஞர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தப்போவதாகவும் தெரிவிக்கப்ப்டுகிறது இது குறித்து, இயக்குனர் சீமான், கைதாகிய தருணத்தில் அங்கிருந்த எமது நிருபர் வழங்கிய சிறப்புச்செவ்வி!

http://www.4tamilmedia.com/index.php?optio...&Itemid=267
கங்குலியின் ஓய்வு விருப்பமா? நிர்ப்பந்தமா?

இந்திய அணியின் பல வெற்றிகளுக்கு காரணமாக இருந்த சௌரவ் கங்குலி களத்தில் நிற்கும் வரை எதிரணி வீரர்களும், ரசிகர்களும் பதற்றமாக இருப்பார்கள். ஆட்டத்தின் போக்கை மாற்றும் ஒருசில வீரர்களில் கங்குலியும் ஒருவர். மகிழ்ச்சியுடன் விடைபெற வேண்டிய கங்குலி மனமொடிந்து விடை பெறப்போவதாக அறிவித்துள்ளார்.
1996ஆம் ஆண்டு இந்திய அணி இங்கிலாந்துக்குச் சென்றபோது கங்குலி அணியில் சேர்க்கப்பட்டார். டெஸ்ட் போட்டியில் விளையாடிய 11 வீரர்களின் பெயர்ப்பட்டியலில் கங்குலி இடம்பெறவில்லை. இந்திய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான நவ்ஜோத் சித்து அணியின் நிர்வாகிகளுடன் பிரச்சினைப்பட்டதன் காரணமாக இங்கிலாந்தில் இருந்து நாடு திரும்பிவிட்டார்.
சித்துவின் இடத்தை நிரப்பக்கூடிய வீரர் இந்திய அணியில் இல்லை என்றாலும் தேர்வாளர்கள் கங்குலியைக் களமிறக்கினார்கள். தேர்வாளர்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்திய கங்குலி 131 ஓட்டங்கள் அடித்து இந்திய அணியில் தனது இடத்தை உறுதிப்படுத்தினார்.
சச்சினும், கங்குலியும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கி டெஸ்ட்டிலும், ஒருநாள் போட்டியிலும் பல சாதனைகளை நிலைநாட்டியுள்ளனர். கங்குலியின் திறமை காரணமாக இந்திய அணியின் தலைமைப்பதவி தேடி வந்தது. இந்திய அணியின் தூண்களில் ஒருவராக இருந்த கங்குலிக்கு இந்திய அணியின் பயிற்சியாளரான செப்பலின் உருவில் பிரச்சினை ஆரம்பமானது.
கங்குலியை அணியிலிருந்து நீக்க வேண்டும் என்பதில் பயிற்சியாளர் செப்பல் குறியாக இருந்தார். கங்குலியின் திறமையாலும் அவருக்கு இருந்த அரசியல் செல்வாக்காலும் கங்குலியை அசைக்க முடியவில்லை.
கங்குலியின் திறமையும் அரசியல் செல்வாக்கும் சரியத் தொடங்கியதும் கங்குலிக்கு சோதனை ஏற்பட்டது. வெங்சர்க்கார் தலைமையிலான தேர்வுக்குழு ஒருநாள் அணியில் இருந்து கங்குலியை வெளியேற்றியபோது கங்குலிக்கு அணியில் இனி இடமில்லை என்று வெளி உலகுக்குத் தெரிந்தது.
சற்றும் தளராத விக்கிரமாதித்தன்போன்று உள்ளூர்ப்போட்டிகளில் விளையாடி தனது திறமையை வெளிப்படுத்திய கங்குலி தேர்வாளர்களின் கவனத்தை மீண்டும் தன் பக்கம் திருப்பினார். ஷேவாக், சுரேஷ் ரெய்னா, கௌதம் கம்பீர் ஆகியோரின் அதிரடியினால் கங்குலியின் இடம் பறிபோனது.
இளம் வீரர்களின் அதிரடி ஆட்டத்தினால் கங்குலியுடன் ட்ராவிட், லக்ஷ்மன் ஆகியோரும் பாதிக்கப்பட்டனர். ஒரு நாள் அணியில் இருந்து கழற்றி விடப்பட்ட இவர்கள் டெஸ்ட்போட்டிகளில் மட்டும் விளையாட அனுமதிக்கப்பட்டனர்
டெஸ்ட்போட்டிகளிலும் இவர்கள் மூவரும் சோபிக்காததனால் திறமையுள்ள இளம் வீரர்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
சச்சின் டெண்டுல்கர் அண்மைக்காலப் போட்டிகளில் அதிகம் சோபிக்கவில்லை. காயம் ஏற்படுவதாலும் உடல் தகுதி இல்லாததாலும் போட்டியிலிருந்து ஒதுங்கிக் கொள்கிறார் சச்சின் டெண்டுல்கர்.
புதிய தேர்வுக்குழு பதவி ஏற்றதும் டெஸ்ட்போட்டியில் விளையாட தனக்கு இடம் கிடைக்கும் என்று கங்குலி உறுதிப்படக்கூறினார். கங்குலி, ட்ராவிட், லக்ஷ்மன் ஆகியோருக்கு டெஸ்ட்போட்டிகளில் சந்தர்ப்பம் வருமா இல்லையா என்ற பட்டிமன்றம் ஒரு பக்கத்தில் நடைபெற்றது. இவர்கள் மூவருக்கும் தேர்வுக்குழு சந்தர்ப்பம் வழங்கும். அதேவேளை கௌரவமான முறையில் அவர்கள் ஓய்வு பெறுவதற்கு வழிவிடப்படும் என்ற கருத்தும் நிலவியது.
ரமணி
நன்றி:மெட்ரோ
எதிர்பார்த்தது போன்றே கங்குலி, ட்ராவிட், லஷ்மன் ஆகியேõருக்கு டெஸ்ட் அணியில் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. டெஸ்ட்போட்டி ஆரம்பமாவதுற்கு முன்னரே அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடருடன் ஓய்வு பெறப்போவதாக கங்குலி அறிவித்துவிட்டார்.
கங்குலியைப்பற்றிய காட்டூன்களும், நகைச்சுவைத் துணுக்குகளும் மிக அதிகமாக வெளிவந்தன. நகைச்சுவை என்ற பெயரில் கங்குலி நோகடிக்கப்பட்டார்.இந்திய அணியின் தேர்வுக்குழுத் தலைவரான ஸ்ரீகாந்தும், அன்றைய தேர்வுக்குழுவால் ஓரங்கட்டப்பட்டவர் தான். இந்திய அணித்தலைவராக நீண்டகாலம் பணியாற்ற வேண்டிய அவர் தேர்வாளர்களின் ஒருதலைப்பட்சத்தால் ஓய்வு பெற்றார். ஆகையினால் வீரர்களின் ஆதங்கம் அவருக்கு நன்கு புரியும்.
கங்குலி தனது ஓய்வை அறிவித்துவிட்டார். அடுத்து ஓய்வு பெறப்போவது யார்? லக்ஷ்மனா? ட்ராவிட்டா? என்ற கேள்வி ரசிகர்களின் முன்னால் உள்ளது. இதற்கிடையில் கும்ப்ளே ஓய்வு பெறப்போவதாக செய்தி வெளியானது. இதனை அவர் மறுத்துள்ளார். 2011ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியிலும் விளையாடப்போவதாக டெண்டுல்கர் கூறியுள்ளார்.
கங்குலி, ட்ராவிட், லக்ஷ்மன், குப்ளே ஆகியோர் ஓய்வு பெறும் காலத்தை நெருங்கி உள்ளனர்.
ரமணி
நன்றி:மெட்ரோ

வைகோவைத் தொடர்ந்து சீமான், அமீரும் கைது

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு எனும் பெயரில் பிரிவினையைத் தூண்டும் வகையில் பேசியதாக இயக்குநர்கள் சீமான் மற்றும் அமீர் ஆகியோரை இன்று போலீஸார் அவர்களது வீடுகளில் வைத்துக் கைது செய்தனர்.இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து திரைப்பட கலைஞர்கள் சார்பில் கடந்த 19 -ந் தேதி ராமேஸ்வரத்தில் பேரணியும், பொதுக் கூட்டமும் நடைபெற்றது.இந்த பொதுக் கூட்டத்தில் பேசிய இயக்குனர்கள் அமீர், சீமான், சேரன், பாரதிராஜா உள்ளிட்ட சிலர் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் அதன் தலைவர் பிரபாகரனைப் புகழ்ந்தும் பேசியதாகக் கூறப்படுகிறது.இதைத் தொடர்ந்து அவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என தமிழகக் காங்கிரஸ் தலைவர் தங்கபாலு மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஆகியோர் அறிக்கை விடுத்தனர்.மேலும் இவர்களைக் கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், தெருமுனைப் பிரச்சாரங்கள் நடத்தப்படும் என தமிழக காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்டது.இன்று மாலைக்குள் இவர்கள் கைது செய்யப்படாவிட்டால் சென்னையில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்பு 3 பேரின் உருவப் பொம்மைகளை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் திரண்டு எரிக்க உள்ளதாகவும் காங்கிரஸ் தரப்பில் எச்சரிக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து இயக்குநர் சீமான், அமீர், சேரன் மற்றும் பாரதிராஜா ஆகியோர் மீது பிரிவினையைத் தூண்டும் வகையில் பேசியதாக போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.இதையடுத்து இன்று மாலை இருவரது வீடுகளுக்கும் சென்ற போலீஸ் படை அவர்களைக் கைது செய்தது. சீமானும், அமீரும் போலீஸார் தங்களைக் கைது செய்வதற்கு வசதியாக வீடுகளில் காத்திருந்தனர்.இருவர் மீதும் பிரிவினையைத் தூண்டும் வகையில் பேசியதாக போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.இதே குற்றச்சாட்டுக்களின் பேரில்தான் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அவைத் தலைவர் கண்ணப்பன் ஆகியோரை ஏற்கெனவே கைது செய்துள்ளது போலீஸ்.கைதுக்கு முன்னதாக போலீஸ் நடவடிக்கை குறித்து இயக்குநர் சீமான் கூறுகையில், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்துப் பேசியதற்காக என்னையும் தம்பி அமீரையும் கைது செய்ய வழக்குப் பதிவு செய்துள்ளார்களாம். இதுகுறித்து போலீசார் எனக்குத் தகவலும் கூறியுள்ளனர். அவர்கள் இப்போது என்னைக் கைது செய்ய வந்து கொண்டிருக்கிறார்கள்.நான் இந்தக் கைதை மகிழ்ச்சியாக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன். நான் தவறாக எதையும் பேசவில்லை. செத்து மடிந்து கொண்டிருக்கிற என் சகோதரனுக்கு ஆதரவுக் குரல் கொடுத்தது தவறா? அது தவறு என்றால் அதை நான் எப்போதும் செய்து கொண்டே இருப்பேன். நான் பேசியதில் எந்தத் தவறும் இல்லை. இந்தப் பேச்சுக்காக உலகத் தமிழர்கள், அறிஞர்கள், தலைவர்கள் பலரும் என்னைப் பாராட்டினார்கள். இந்தக் கைது எனக்குப் பெருமைதான்!, என்றார் சீமான்.பாரதிராஜா கைதாவாரா?பாரதிராஜா மற்றும் சேரனையும் விரைவில் போலீசார் கைது செய்யக்கூடும் எனத் தெரிகிறது.

Wednesday, October 22, 2008

சாமந்திப் பூ டீ குடித்தால் நீரிழிவு நோய் பாதிக்காது

சாப்பாட்டுடன் சீமை சாமந்திப் பூ டீயும் சேர்த்து குடித்தால், நீரிழிவு நோய் வராது. நீரிழிவு நோயினால் ஏற்படும் நரம்பு பாதிப்பு, பார்வையிழப்பு, சிறுநீரக கோளாறு போன்றவையும் ஏற்படாது என, ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் மேலும் கூறியுள்ளதாவது:உலக நாடுகள் பலவற்றிலும் "டைப்-2"வகை நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மன அழுத்தம், ஜலதோஷம், மாதவிலக்கு கோளாறுகள் போன்றவை உட்பட பல பிரச்னைகளை தீர்க்க சீமை சாமந்திப் பூ, பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.நாம் சாப்பிடும் போது, இந்த சாமந்திப் பூவில் தயாரான மூலிகை டீயையும் சேர்த்துக் குடித்தால், நீரிழிவு நோய் வராது.இந்த சீமை சாமந்திப் பூவில் தயாரான டீயை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட எலிகளுக்கு கொடுத்து பரிசோதித்ததில், அவற்றின் ரத்தத்தில் சர்க்கரை அளவு கணிசமாக குறைந்துள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும், இன்னும் பல சோதனைகள் மூலம் இவை உறுதி செய்யப்பட வேண்டும். இவ்வாறு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆண்களில் வழுக்கைக்கு அம்மாக்களா காரணம்..?!

ஆண்களில் பிறப்புரிமை சார்ந்து தலையில் முடி (மயிர்) உதிர்தல் (வழுக்கை) ஏற்படுவதற்கு தாயிடம் இருந்து பெறப்படும் இலிங்க நிறமூர்த்தமான (பால் தெரிவு நிறமூர்த்தங்களில் ஒன்று) X வகை நிறமூர்த்தத்தில் (chromosome) உள்ள பரம்பரை அலகே (Gene) காரணம் என்று இதுவரை காலமும் நம்பப்பட்டு வந்தது. ஆனால் X நிறமூர்த்தத்தில் உள்ள பரம்பரை அலகுக்கு நிகராக மனிதனில் உள்ள 23 சோடி நிறமூர்த்தங்களில் 20ம் சோடியில் உள்ள பரம்பரை அலகுகளும் செல்வாக்குச் செய்கின்றன என்ற தகவல் தற்போது வெளியிடப்பட்டிருப்பதுடன், அங்கு காணப்படும் தந்தை வழியில் இருந்தும் தாய் வழியில் இருந்தும் பெறப்படும் பரம்பரை அலகுகளால் கூட முடி உதிர்தல் தூண்டப்படலாம் என்ற அறிதலும் பெறப்பட்டுள்ளது.அந்த வகையில் ஆண்களில் முடி உதிர்தலுக்கு தாய் வழி X நிறமூர்த்தத்தில் உள்ள பரம்பரை அலகு மட்டுமன்றி தந்தை வழி பரம்பரை அலகுகளும் காரணமாக இருக்கின்றன என்பதால் தந்தைக்கு முடி உதிர்தல் அல்லது வழுக்கை இருக்கும் பட்சத்தில் மகனுக்கும் இருக்க அதிக வாய்ப்புள்ளது.அது மட்டுமன்றி ஆண்களில் சுமார் 14% பேர் மேற்குறிப்பிட்ட இரண்டு வகை பரம்பரை அலகுகளிலும் முடி உதிர்தலைத் தூண்டும் அலகுகளைக் கொண்டிருக்கின்றனர் என்பதுடன் இப்பரம்பரை அலகுகளின் தாக்கத்தால் முடியுதிர்தல் பிரச்சனை 7 மடங்கு அதிகரித்த அளவில் இளமைக் காலத்திலேயே ஏற்பட வாய்ப்பிருப்பதாக குறித்த ஆய்வில் இருந்து கண்டறிந்துள்ளனர். மேலும் ஏதாவது ஒரு முடியுதிர்தல் பரம்பரை அலகுடன் சுமார் 40% ஆண்கள் இருக்கின்றனர்.எனவே முன் கூட்டிய மரபணு அலகு அல்லது பரம்பரை அலகு ஸ்கானின் மூலம் பெறப்படும் தகவல்களைக் கொண்டு முன் கூட்டிய முடி உதிர்தலைத்தடுக்க மரபணுச் சிகிச்சை (gene therapy) உட்பட பலவகை சிகிச்சை முறைகளை ஆரம்பிக்க முடியும் அல்லது முடி மீள நாட்டல் மூலம் முடியை வளர்க்க முடியும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்..!
செல்லிடத் தொலைபேசியால் தோல் நோய் ஏற்படுகிறது.

செல்லிடத் தொலைபேசி (Mobile phone) பாவனையாளர்கள் மத்தியில் குறித்த ஒரு தோல் வியாதி (skin rash) அதிகரித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. செல்லிடத் தொலைபேசிகளில் நிக்கல் உலோகம் பாவிக்கப்படுவதும் அது செல்லிடத் தொலைபேசிகளை பாவிக்கும் பாவனையாளரின் முகம்,காது உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தோலுடன் நீண்ட காலத்துக்கு தொடுகையில் இருக்க நேர்வதாலும் இவ் ஒவ்வாமை சார்ந்த பாதிப்பு உருவாவதாக தெரிவிக்கப்படுகிறது.எனினும் செல்லிடத் தொலைபேசிகளின் வெளிப்புற கவசம் மற்றும் பொத்தான்களில் நிக்கல் உலோகம் பாவிக்கப்படாத செல்லிடத் தொலைபேசிகளைப் பாவிப்பதால் இப்பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும் என்று கூறப்படுகிறது.பொதுவாக பெண்கள் மத்தியில் நிக்கல் உலோக ஒவ்வாமையின் பாதிப்பு அதிகமாக ஏற்படுகிறது. காரணம் அவர்கள் அணியும் ஆடம்பர ஆபரணங்களிலும் நிக்கல் படலமிடப்பட்டிருப்பதே ஆகும்.

மாத்திரைகளால் மூளைச் செயற்பாட்டை ஊக்குவிக்கலாம்.

பரிந்துரைக்கப்பட்டும் Ritalin (methylphenidate) போன்ற அதிக துடிப்புள்ள சிறுவர்கள் மத்தியில் கற்றல் திறனை அதிகரிக்க தயாரிக்கப்படும் (a drug designed to treat hyperactive children - to maximise their learning power)மாத்திரை மற்றும் Provigil மாத்திரைகளைப் பாவிப்பதால் மூளையின் செயற்பாடுகள் மற்றும் ஞாபக சக்தி ( focus, concentration or memory) ஊக்கமடைவதாக பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் நடத்திய கருத்துக்கணிப்பில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது.எனினும் இவ்வாறு மாத்திரைகளை நீண்ட காலம் பாவிப்பதன் பின்னால் உள்ள பாதிப்புக்கள் மற்றும் உடல் நலத்துக்கு ஏற்படக் கூடிய ஆபத்துக்கள் தொடர்பில் சரியான ஆய்வு ரீதியான முடிவுகள் இன்னும் பெறப்பட வேண்டிய நிலையில் இது ஒரு ஆரம்ப நிலை அவதானிப்பாக மட்டும் இருக்கிறதுஅதுமட்டுமன்றி நீண்டகாலத்துக்கு இவ்வாறான மாத்திரைகளை உட்கொள்ளல் குறிப்பிட்ட மாத்திரைகள் கொண்டுள்ள இரசாயனப் (வேதியல்) பதார்த்தங்களுக்கு மக்களை அடிமைப்படுத்தி விடலாம் என்றும் எச்சரிக்கின்றனர் விஞ்ஞானிகள்.

ஏரோ டைனமிக் கார்

ஒரு லிட்டர் பெட்ரோலில் 180 கி.மீ., தூரம் செல்லும் காரை, இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் வடிவமைத்துள்ளனர். பெங்களூரு ஆர்.வி.இன்ஜினியரிங் கல்லூரியின் மெக்கானிக்கல் துறை மாணவர்கள், மிகவும் எடை குறைந்த இந்த ஏரோ டைனமிக் காரை வடிவமைத்துள்ளனர். இந்த காரில் இரண்டு குதிரைத் திறன் கொண்ட 97 சி.சி., ஹோண்டா இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த காரின் சேசிஸ், அதிக திறன் கொண்ட அலுமினியத்தால் செய்யப்பட்டுள்ளது. ஏர் கூல் இன்ஜினுடன் பைபர் கிளாஸ் கூண்டு அமைக்கப்பட்டுள்ளது. இதன் சக்கரங்கள் ஒவ்வொன்றும் 600 கிராம் எடை கொண்டவை. காரின் மொத்த எடை 55 கிலோ. ஒருவர் மட்டுமே அமர்ந்து செல்லக்கூடிய இந்த கார், 10 அடி நீளமும், 2.5 அடி அகலமும் கொண்டது. இந்த காரில் டி.வி.எஸ்., கார்பரேட்டர் பொருத்தப்பட்டுள்ளது. எளிதில் கையாளப்படும் இலகு பிரேக்குகள் இதன் சக்கரங்களில் பொருத்தப்பட்டுள்ளன. பெங்களூரு என்.ஐ.சி.இ., காரிடாரில் இந்த கார் இயக்கி சோதிக்கப்பட்ட போது, ஒரு லிட்டருக்கு 180 கி.மீ., மைலேஜ் கிடைத்தது.
இந்த காரின் இன்ஜின் வடிவமைப்பு, வர்த்தக ரீதியிலும் பயன்படுத்தப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. காரை வடிவமைத்த குழுவின் தலைவர் நிஷாந்த் சராவ்கத், ஒரு லிட்டருக்கு 500 கி.மீ., ஓடும் காரை வடிவமைப்போம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த திட்டத்துக்கு, 5.5 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

ஒரு மோசமான எழுத்தாளனின் பத்து அடையாளங்கள்

1. தான் கடைசியாக எழுதியது என்னவோ அதுவே தன் வாழ்நாளின் “மாஸ்டர் பீஸ்” என்று சொல்லிக்கொள்வார்கள்.2. பொது இடங்களில் சந்திக்க நேர்ந்தால் சந்தனத்துல என்னோட கட்டுரை வந்துருக்கு, தூர மலர்ல என்னோட கதை வந்திருக்கு, யோக்யாவில என்னோட தொடர் வரப்போவுது எனப் பெருங்குரலில் பேசி கலவரமூட்டுவார்கள்.3. வட்டார மொழியில் எழுதுகிறேன் பேர்வழி என்று எந்த வட்டாரத்திலும் இல்லாத ஒரு மொழியில் எழுதுவார்கள்.4. எப்போதும் ஏதாவது ஒரு பிரசுரத்தின் பெயரைச் சொல்லி அதற்காக ஒரு நூலை எழுதிக்கொண்டிருப்பதாகச் சொல்வார்கள்.5. ஒவ்வொரு பத்திரிகையின் தன்மைக்கேற்ப தன்னையும் மாற்றிக்கொண்டு எழுதுவார்கள்.6. என்பதுகளில் காலாவதியாகிப் போய்விட்ட உத்திகளையும் நாடகத்தனமான உரையாடல்களையும் எழுதி விட்டு அதன்படியே எழுதி ரெமுனரேஷன் வாங்கும்படி சக எழுத்தானுக்கு யோசனை சொல்வார்கள்.7. கதை ஏதேனும் வார இதழ்களில் வர இருப்பதாகத் தெரிந்துவிட்டால் போஸ்ட்கார்டில் துவங்கி, எஸ்.எம்.எஸ், இமெயில், ஸ்க்ராப் என சகல வழிகளிலும் அதை மொத்த ஜனத்தொகைக்கும் தெரியப் ‘படுத்து’ வார்கள்.8. நண்பர்களின் வஞ்சகப் புகழ்ச்சியை உண்மையென்று நம்பித் தொலைப்பார்கள்.9. கதைகளிலும், சிந்தனையிலும் செய்ய வேண்டிய மாற்றத்தை தலைமுடியிலும், மோவாய்க்கட்டையிலும் அடிக்கடி மேற்கொண்டு கலவரப்படுத்துவார்கள்.10. வாசிப்பதைக் காட்டிலும் சுமார் நூறு மடங்கு அதிகமாக எழுதிக் குவிப்பார்கள் (யாரும் வாசிக்கத் தயாராக இல்லாத போதும்)

Monday, October 20, 2008

“துக்ளக்” சோ ராமசாமி ஆலகால விஷத்தை அப்படியே கக்கி இருக்கிறார்.


பார்ப்பன ஏடுகளைப் பகிஷ்கரியுங்கள்! பகிஷ்கரியுங்கள்! என்று சொல்ல வேண்டிய நாம் அருள்கூர்ந்து இந்தவார துக்ளக்கை படியுங்கள் என்று பரிந்துரை செய்கின்றோம்.பத்துப் பார்ப்பனர்கள் செத்திருந்தால்...அறிவியல் சிந்தனைகள் அப்படியே பொங்கி வழிகின்றன என்பதற்காகவா?இதுவரை வெளிவராத அரிய தகவல்கள் அங்கே அரும்பி நிற்கின்றன என்பதற்காகவா?புத்தம் புதிய கருத்துகளும், தகவல்களும் அதில் பூத்துக் குலுங்குகின்றன என்பதற்காகவா?மனித உரிமைக் குரல் மகத்தானதாக கேட்கிறது என்கிற எண்ணத்தாலா?அல்ல.. அல்ல. இவை எல்லாம் இடம் பெற்றால் அது பார்ப்பன சோ ராமசாமி கைவண்ணம் படும் இதழாக இருக்க முடியுமா?பார்ப்பனர் தமிழர்களின் பகைவனாக இன்று வரையிலும், இந்தநொடி வரையிலும் எந்த மட்டத்தில் இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டாமா?பார்ப்பானாவது - தமிழனாவது அவர்களும் தமிழர்கள் தான் என்று பினாத்துகிற அறிவு ஜீவிகள் இன்னும் தமிழர்களிலே ஒரு சிலர் இருக்கத்தானே செய்கிறார்கள்!முன்பு போல் எல்லா பார்ப்பனர்களும் இப்பொ ழுது இல்லை - எவ்வளவோ திருந்தி விட்டார்கள் - முனியாண்டி விலாஸ் ஓட்டலில் சாப்பிடுகிறார்கள் என்று சபாஷ் போடும் தமிழர்கள் இப்பொழுதும்கூட உண்டே!அவர்கள் எண்ணத்திலே ஒரு சவுக்கடி கொடுத்து, நாங்களாவது திருந்துவதாவது! தமிழர் எதிர்ப்பு எங்களின் இரத்தத்திலே ஊறிய ஒன்று! என்று பட்டவர்த்தனமாக பட்டாசு வெடித்துத் தெரிவிப்பது போல திருவாளர் சோ ராமசாமி ஆலகால விஷத்தை அப்படியே கக்கி இருக்கிறார்.ஈழத் தமிழர்களுக்காக தமிழகம் பொங்கி எழுந்து விட்டதாம்! தமிழ்நாட்டுக் கட்சிகள் போட்டிப் போட் டுக் கொண்டு போராட்டங்களை நடத்துகின்றன வாம். தாங்கிக் கொள்ள முடியவில்லை தர்ப்பைப்புல் கூட்டத்துக்கு - தகர டப்பாவை எடுத்துக் கொண்டு தப்பாட்டம் போடுகிறது.அட்டைப்படத்திலேயே அதன் ஆத்திரம் ஆரம்பமாகிறது. தலையங்கத்திலும் கண்டனம்.கம்யூனிஸ்ட் போராட்டத்தில் அ.தி.மு.க., பங்கேற்காதது - ஏன்? - தனிக் கட்டுரைஇலங்கை பிரச்சினையை இப்படியும் தீர்க்க லாம் - கிண்டலும் கேலியும் கொட்டிக் கிடக்கும் கற்பனை உரையாடல்கம்யூனிஸ்ட் மேடையில் புலி ஆதரவுப் பிரச்சாரம்.ஒரு இதழில் ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவதற்கான இத்தனை தலைப்புகளில் ஒரு பார்ப்பன இதழ் எழுதிக் குவிக்கிறது - எகத்தாளம் போடுகிறது - அக்னிக் குழம்பை அள்ளித் தெளிக்கிறது - ஆத்திரப் புயல் வெடிக்க அம்மாமி ஏடு வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்கிறது - சகட்டு மேனியாகத் தமிழகத் தலைவர்களை யெல்லாம் தரக் குறைவாக விமர்சிக்கிறது என்றால் இதன் தன்மையைத் தமிழர்கள் எண்ணிப் பார்க்க வேண்டாமா?நூற்றாண்டு காணும் அறிஞர் அண்ணா இந்தப் பார்ப்பனர்களின் பாசாங்குத் தனத்தையும் பச்சோந்தித்தனத்தையும் பல நேரங்களில் பல முறைகளில் எடுத்துரைத்தது உண்டு - எழுதியதும் உண்டு.அதில் ஒரு முத்து: தமிழ்நாட்டில் பிறந்தும், தமிழ் மொழியில் பயின்றும், தமிழரெனச் சொல்லிக் கொண்ட போதிலும் தமிழ்மொழி மூலம் பிழைத்து வந்தாலும், தமிழிலே பண்டிதரெனப் பட்டப் பெற்றாலும், சங்க நூல் கற்றாலும், பார்ப்பனர்கள் தமிழிடத்திலே அன்பு கொள்வதில்லை.அதனைத் தம் தாய் மொழியெனக் கருதுவதில்லை. அவர்களின் எண்ணமெல்லாம் வடமொழியாகிய, சமஸ்கிருதத்தின்மீதுதான் (திராவிடநாடு 2.11.1947)தமிழ் என்று வரும் இடத்தில் எல்லாம் தமிழர் என்றும் போட்டுக் கொள்ளலாம். இரண்டுக்கும் பொருள் ஒன்றுதான்.தமிழன் யார் என்ற வினாவுக்கு அண்ணா அவர்கள் அழகாகப் பதில் சொன்னார்: மொழியால் தமிழன் விழியால் தமிழன், வழியால் தமிழன், என்ற அழகான ஒரு அளவுகோலைக் கொடுத்தார்.இந்த மூன்றையும் உரை கல்லில் உரைத்துப் பார்த்தால் ஒரு பார்ப்பான்கூடத் தமிழனாகத் தேறமாட்டான்.ஈழத்திலே என்ன நடந்து கொண்டு இருக் கிறது? நீண்டகாலமாக தமிழர் அழிப்பு அங்கு நடந்து கொண்டு இருந்தாலும் - கடந்த கால் நூற்றாண்டாக அங்கு நடந்து வரும் இனப் படுகொலை (Genocide) உலக மாந்தர்களையே உலுக்கி எடுத்து விட்டது.தமிழன் மாமிசம் இங்கே கிடைக்கும் என்று விளம்பரம் செய்தார்களே!உலகிலேயே பாதுகாப்பான இடம் சிறைச் சாலை என்பார்களே - அந்தச் சிறைச் சாலை யையே உடைத்து போராளிகளின் கண்களைக் குரூரமாகப் பிடுங்கி பூட்சு காலால் மிதித்து வெறியாட்டம் போட்டார்களா இல்லையா?தமிழர்களின் வீடு வீடாக நுழைந்து பாலியல் வன்கொடுமைக்கு தமிழச்சிகளை ஆளாக்கினார்களா இல்லையா?பச்சிளம் குழந்தைகள் தங்கி இருந்த விடுதியில்குண்டுகளைப் போட்டு அந்தக் குழந்தை மலர்களைக் கருக்கிய கல் நெஞ்சர்கள் யார்?மருத்துவமனையிலே குண்டு போட்டு, நோயாளிகள் என்று கூடப் பார்க்காமல் மரண ஊருக்கு அனுப்பி வைத்த அசல் காட்டுவிலங்காண்டிகள் யார்?தங்களுக்கான மரணக் குழிகளை - தாங்களே வெட்டிக் கொண்டு அந்தக் குழிக் குள்ளேயே தங்கள் உடலை உயிரோடு புதைத்துக் கொண்டு மூச்சுத் திணறி (இடம்: செம்மணி) சாக வேண்டிய அவலத்திற்கு தமிழர்களை ஆளாக்கிய கொலைகாரக் கூட்டம் எது?இவ்வளவும் நடக்கும் அரசு துணையோடு - சிங்கள வர்கள் அரங்கேற்றுவார்கள். தமிழன் கைகள்யெல்லாம் பூ பறித்துக் கொண்டு இருக்க வேண்டும்.தன் மகளோ, தாயோ, தாரமோ சிங்களக் காடையர் களால் தன் கண் முன்பே கற்பழிக்கப்படுவார்கள் - அதனைப் பார்த்துக் கொண்டு சோற்றாலடித்த பிண்டமாக இருக்க வேண்டும். அதனைத் தடுக்க ஆயுதம் ஏந்தக் கூடாது என்பவன் பார்ப்பானாக வேண்டுமானால் இருக்கலாம் - அவர்களுக்கும் மான உணர்வுக்கும் என்ன ஒட்டு உறவு?அய்வருக்குமே தேவி அழியாத பத்தினி என்று கூறி கோயில் கட்டிக் கும்பிடும் கூட்டமாயிற்றே!தந்தையைக் கொன்று தாயைப் புணர்ந்த தறுதலைக் கூட்டமாயிற்றே - அவனுக்கு மோட்சம் அளித்தான் தயா பரன் என்று கூசாமல் கூறும் கும்பலாயிற்றே!எங்கள் சிவன் யார் தெரியுமா? தாருகாவனத்து ரிஷிப் பத்தினிகளைக் கற்ப ழித்த காருண்ய மூர்த்தி என்று கூசாது பெருமை பேசும் குழுவாயிற்றே!அவர்களுக்கு மானமாவது - மண்ணாங் கட்டியாவது!ஆனால் தமிழர் அத்தகையவர் அல்லரே!மானம் ஒன்றே நல் வாழ்வெனக் கொண்டுவாழ்ந்த என் மற வேந்தர்பூனைகள் அல்லர்புலிநிகர் தமிழ் மாந்தர் அல்லவாஅதனால்தான் புலி நிகர் தமிழ் மாந்தர்களான ஈழப் புலிகள் தாயைச் பழித்தவனின் - சிதைத்தவனின் தலையைக் கொய்யாமல் விட மாட்டேன் என்று வீரப் போர் புரிந்து கொண்டு இருக்கிறார்கள்.அது வன்முறையா? வன்முறைக்கு எதிரானது வன்முறை என்பது ஒப்புக் கொள்ளப்பட்ட ஒன்றுதான்.தற்காப்புக்காகப் போரிடுவதோ, அதுவும் தம் இன மக்களின் உரிமைகளுக்காகவும், மானத்திற்காகவும் போராடு வதையோ குறைத்துச் சொல்லுவோர் யாராக இருந்தாலும் அவர்கள் ஈனர்கள் அல்லாமல் வேறு என்ன?வேலை வாய்ப்புக்காகவும், பதவி உயர்வுக்காகவும், இடம் மாறுதலுக்காகவும் - பெரிய அதிகாரிகளிடம்... அனுப்பி வைத்துக் காரியம் சாதிக்கும் ஒரு கூட்டம்தாய் மானபங்கப்படுத்தப் படும்போது தாங்கொணா உணர்வுடன், உயிரைத் திரண மாக மதித்து, எதிரிகளை எதிர்த்து நிற்கும் மானமுள்ள தமிழர்களைக் கொச்சைப் படுத்தத்தான் செய்வார்கள்.ஒரு இனத்தின் மானத் துக்காக உரிமைக்காக அரசு பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிடுவது வன்முறையாம்.அதே நேரத்தில் சங்பரிவார்க் கும்பல் இன்னொரு மதத்தின் வழிபாட்டுத் தலத்தை அடித்து நொறுக்கும் அது வன்முறை இல்லையாம்! - அடேயப்பா அதற்கு எப்படியெல்லாம் இந்துவும் துக்ளக்க்கும் வக்காலத்து வாங்குகின்றன.கன்னிகாஸ்திரிகளை அந்தக் கா(லி)விக் கும்பல் கற்பழிக்கும் - அது காலித் தனம் அல்லவாம். கேட்டால் எதிர்வினையாம்!கர்ப்பிணிப் பெண்களின் குடலைக் கிழித்து மாலை யாகப் போட்டுக் கொண்டு வெறியாட்டம் போடும் சங்பரிவார் கூட்டம் - அது ஒன்றும் குற்றமில்லையாம்.பச்சிளங்குழந்தை என்றும் பாராது சிதறு காய் போல அந்தக் குழந்தையின் தலையை கருங்கல்லில் மோதி துடிக்கத் துடிக்க கொலை செய்வார்களாம். அந்தச் செய்தியின் பக்கம் அவர்களின் எழுத்தாணிகள் ஓடாதாம்!ஒரு மாநிலத்தில் இரண்டாயிரம் முஸ்லிம்கள் கொல்லப்படுவதற்குக் காரண மாக இருந்த ஒரு ஆள் - உச்சநீதிமன்றத்தால் நீரோ மன்னன் என்று அழைக்கப் பட்ட ஒரு ஆசாமி, ஒரு மாநிலத்தில் முதலமைச்சராகயிருந்து சாதித்ததுபோதும் - சரி பாரத பூமியின் பிரதமராக வர வேண்டும் என்று வரிந்து வரிந்து எழுதுகிறார் வருணா சிரம வெறியரான திருவாளர் சோஇலங்கையிலே ஒரு பத்துப் பார்ப்பனர்கள் சிங்களவர்களால் சுடப்பட்டு இருந்தால் இப்படி யெல்லாம் சோ கூட்டம் எழுதுமா?அய்.நா. சபைக்கே பிரச்சினையைக் கொண்டு போய் ஆடித் தீர்த்திருக்க மாட்டார்களா?நரசிம்மராவ் வெளியுறவுத் துறை அமைச்சராகயிருந்த போது, இலங்கைக்குச் சென்றார்; அங்கு ஒரு பார்ப்பனக் குடும்பம் அவதிப்பட்டதாகக் கூறி - தான் வந்த விமானத்திலேயே இந்தியாவுக்கு அழைத்து வந்தார் என்பது பலருக்கும் மறந்திருக்கலாம்; ஆனால் கருப்புச் சட்டைக்காரர்கள் மறக்க மாட்டார்களே!சூத்திரன் கொலை செய்தால் சிரச்சேதம், பார்ப்பான் கொலை செய்தால் சிரைச் சேதம் (மயிர் மழித்தல்) என்கிற மனுதர்மப் புத்தி இந்த 2008-லும் இந்தப் பார்ப் பனர்களை விட்டுப் போக வில்லை என்பதற்கு அடையாளம்தான் இந்தவார துக்ளக் இதழ்.இதற்கு மேலும் என்ன எழுதித் தொலைப்பதோ!தமிழா இனவுணர்வு கொள்!தமிழா தமிழனாக இரு!தமிழர் தலைவரின் இந்த முழக்கங்கள்தான் நினைவிற்கு வருகிறது.

‘கொல்வேன்’ என்று மிரட்டும் ஸ்ரீரங்கத்து அய்யங்காரும் கொல்லாமல் தடுக்கக் கோருவோரைச் சாடும் சென்னை அய்யங்காரும்!

ஈழத்தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண இந்திய அரசு தலையிடவேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகத்தின் 27 கட்சிகள் ஒன்றிணைந்து - 6 கோரிக்கைகளை 6 தீர்மானங்களாக இயற்றி மத்திய அரசின் அவசரப் பரிசீலனைக்கு முன் வைத்துள்ளன. இந்த ஆறு கோரிக்கைகளில் எந்த ஒரு கோரிக்கையும் இலங்கை அரசின் இறையாண்மைக்கு விரோதமானவை என்று மனச்சாட்சியுள்ளவர்கள் எவரும் கூறமாட்டார்கள். 1. இலங்கையில் போர் நிறுத்தப்பட்டு - சகவாழ்வு திரும்பிட இந்தியப் பேரரசு உடனடி நடவடிக்கை எடுத்திடுக - என்று கோருவதில் இலங்கையின் இறையாண்மைக்கு விரோதமானது என்ன இருக்கிறது? 2. இலங்கை அரசுக்கு இந்திய அரசு ஆயுத உதவி வழங்கி வருவதை உடனடியாக நிறுத்திடவேண்டும் என்று கோருவதில் இலங்கையின் இறையாண்மைக்கு விரோதமானது என்ன இருக்கிறது? 3. போர் நிறுத்தம் செய்யப்பட்டு - பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உணவு, உறையுள், மருந்துகளை மத்திய அரசு வழங்குக - என்று கோருவதால் இலங்கை இறையாண்மைக்கு என்ன பாதகம்? 4. தொண்டு நிறுவனங்களின் உதவிகளை செஞ்சிலுவைச் சங்கம் மூலம் நேரடியாக வழங்கிட மத்திய அரசு முன்வருக - என்று கோருவது எந்த விதத்தில் இலங்கையின் இறையாண்மையை பாதித்துவிடும்? 5. தமிழக மீனவர்களைக் கண்மூடித்தன மாகத் தாக்கும் இலங்கைக் கடற்படையினரின் செயலுக்கு நிரந்தரத் தீர்வு காண்க - என்று கோருவது எந்த வகையில் இலங்கையின் இறையாண்மைக்கு விரோதமானது? 6. இலங்கையில் இரண்டு வாரகாலத்திற்குள் போர் நிறுத்தம் செய்ய இந்திய அரசு முன்வரா விட்டால் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலகிட நேரிடும். - என்று கூறுவதில் இலங்கையின் இறையாண்மைக்கு என்ன பங்கம் ஏற்பட்டுவிடும்? ஈ.ழத்தமிழர் பிரச்சினைக்காகத் தமிழக முதல்வர் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் எதிலும் இலங்கை அரசின் இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கும் எந்த அம்சமும் எள்முனையளவும் கிடையாது என்பது மட்டுமல்ல; கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்களில் எவரது பேச்சிலும் இலங்கையின் இறையாண் மைக்கு சவால்விடும் விதத்தில் ஒருவரி கூட இருக்கவில்லை. இந்நிலையில் - பார்ப்பனர்களான ‘இந்து’ ஏட்டின் மாலினி பார்த்தசாரதியும் - சுப்பிரமணியசாமியும், துக்ளக் சோவும் ஈ.ழத்தமிழர்களை காப்பாற்றுங்கள் என்று இந்திய அரசிடம் கோரிக்கை வைப்பவர்களை தமிழ் இனவெறியர்கள், குறுமதிக் கொள்கையாளர் என்றெல்லாம் இழிவுபடுத்தி - எரிச்சலும் துவேஷமும் பொங்கிட தாக்குதல் நடத்த ஆரம்பித்திருக்கிறார்கள்! இப்படியெல்லாம் இவர்களை எழுத வைப்பது எது? இவர்கள் எல்லாம் தமிழ்நாட்டில் பிறந்தவர்கள், தமிழ்நாட்டிலேயே வசிப்பவர்கள், தமிழ்நாட்டிலேயே பிழைப்பு நடத்துபவர்கள் என்றாலும் இவர்கள் ஒருபோதும் தமிழர்கள் அல்ல! இவர்கள் தங்களை ஆரியர்கள் வழிவந்த பிராமணர்கள் என்று கூறிக் கொள்வதில் பெருமைப் படுபவர்கள். - பிராமணரல்லாதார் கோயிலுக்குள் நுழையக்கூடாது. - கடவுளுக்கு தமிழில் அர்ச்சனை செய்யக்கூடாது. சமஸ்கிருதத்தில்தான் அர்ச்சனை நடத்தப்படல் வேண்டும். - கடவுள் சிலை இருக்கும் கருவறைக்குள் நுழையும் உரிமை பிராமணர்களுக்கு மட்டுமே உண்டு. - கடவுள் சிலைகளுக்கு அபிஷேகம் செய்யவும் - அர்ச்சனை செய்யவும் பிராமணர் களுக்கு மட்டுமே உரிமையுண்டு. - நடராஜரின் சந்நிதியில் - திருச்சிற்றம்பல மேடையில் தமிழில் - தேவாரம் திருவாசகம் பாடக்கூட உரிமை கிடையாது. - என்று பிராமண வெறி தலைக்கேறிட - பிராமணரல்லாத மக்களை அவமதித்து வருபவர்கள். அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அங்கு வேலை பார்க்கும் இந்தியர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டால் குடம் குடமாய்க் கண்ணீர் வடிப்பார்கள்! காரணம் என்ன? அமெரிக்காவாழ் இந்தியர்கள் - அமெரிக்காவில் உத்தியோகம் பார்க்கும் இந்தியர்கள் என்றால் அவர்களெல்லாம் யார்? பெரும்பாலும் பார்ப்பனர்களே! ஆகவே, அமெரிக்காவாழ் ‘இந்தியர்’களுக்கு வேலைபோய்விடும் என்றாலே அலறுவார்கள், கதறுவார்கள், கண்ணீர் வடிப்பார்கள். ஆனால் - ஈ.ழத்தமிழர்கள் 20 லட்சம் பேர் - இலங்கை ராணுவத்தினால் பதறப் பதறப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்; பல லட்சம் பேர் வீடு வாசல்களை இழந்து இலங்கையில் - சொந்த நாட்டிலேயே - உடைமைகளையும் உரிமை களையும் இழந்து தவிக்கிறார்கள் என்பதோடு - தாய்த்தமிழ் மண்ணிலும் ஆண்டு பலவாக அகதிகள் முகாம்களில் வசித்து வருகிறார்கள். இவர்கள் மட்டுமல்ல; தமிழக மீனவர்களையே 400க்கும் மேற்பட்டவர்களை இலங்கை ராணுவ வெறியர்கள், சுட்டுத்தள்ளித் தங்கள் இனவெறிக்கு பலியிட்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட தமிழர்களை அப்பாவித் தமிழர்களை இலங்கை இன வெறி ராணுவத் தாக்குதல்களிலிருந்து காப்பாற்றுங்கள் என்று - இந்திய அரசிடம் - தாய்த் தமிழகத்தின் முதல்வரும் - அரசியல் கட்சித் தலைவர்களும் வேண்டுகோள் விடுத்தால் - கோரிக்கைகள் வைத்தால் தமிழ் இனவெறி குறுமதிக் கொள்கை என்று பார்ப்பனர்கள் படபடக்கிறார்கள். இதுபற்றி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் ‘ஜனசக்தி’ நாளிதழில் ‘குருதிப்புனலும் குள்ள நரிகளும்’ என்ற தலைப்பிட்டு ஒரு சிறப்புக் கட்டுரை எழுதியுள்ளார். அதன் சில பகுதிகள் வருமாறு:- அக்டோபர் பதின்மூன்றாம் நாளன்று வெளியான இந்து நாளேட்டில் மாலினி பார்த்தசாரதி, தமிழ் இனவெறி - குறுமதிக் கொள்கையாளர்களைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அவருக்கு பதினான்காம் நாளன்று தமிழக அரசு கூட்டிய சர்வ கட்சிக் கூட்டம் நடைபெறுவது தெரிந்தே எழுதியுள்ளார். அவரது கருத்தை ஆதரித்து 15-ம் நாள் வெளியான இந்துவில் பல கடிதங்கள். மறுத்துக் கூறப்பட்ட ஓரிரு கடிதங்களில் சில வரிகள். இந்தியன் எக்ஸ்பிரசில் சுப்பிரமணியசாமி கட்டுரை... இவர்களை யார் என நமக்கும் புரிகிறது. நம்மைத் தான் அவர்களால் புரிந்து கொள்ள இயலவில்லை. இட்டுக்கட்டிப் பொய்களை விதைக்க அவர் களுக்கு வாய்ப்பு உள்ளது. ஆனால், மெய்மையே வெல்லும் என்பதில் நமக்கு நம்பிக்கையுண்டு. இந்தியாவில் சாதிப்படி வரிசை முறை பல்லாண்டுகளாக இருக்கிறது. எனவே, இங்கேயே பிறந்து வாழ்ந்தாலும், தங்களுக் கென்று தனி அக்கிரகாரம் கட்டி ஒதுங்கி வாழ்ந்த வர்கள், இந்த மண்ணில் பிறந்த மைந்தர்களுக்கு ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் சேரிகள் கட்டி, சேற்றுக்குள் தள்ளியவர்களின் சிந்தனை, இன்றைக்கும் ஒரு தனித் தீவு கட்டி, ஒரு சிந்தனை வட்டத்திற்குள்தான் சிலர் வாழ்கின்றனர். இவர்களால், தமிழ் மண்ணோடும், மக்களோடும் கலக்க முடியவில்லை. மக்களின் உணர்வுகளையும் புரிந்து கொள்ள முடிவது இல்லை. எனவேதான், மொழி வெறியர்களாக இனக் குறுமதியாளர்களாக தமிழ்நாட்டுக் கட்சிகளை வருணிக்க முடிகிறது. தமிழக அரசு கூட்டிய கூட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தமிழகத்தை ஆளும் பொறுப்பிலுள்ள தி.மு.க.வும் கலந்து கொண்டது. ஆனால் மாலினியும், சுப்பிரமணியசாமியும் தமிழ் மக்களின் உண்மையான பிரதிநிதிகளைப் போலவும், கலந்து கொண்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்துக் கட்சிகளும் குறுமதியாளர்களாகவும், சிறுபான்மை மக்களின் வெறிக்குரல் என்றும் எழுத முடிந்தது எப்படியோ தெரியவில்லை. சரி, இனவெறி, மொழிவெறி, குறுமதிக் கொள்கை படைத்தோர் நிறைவேற்றிய தீர்மானத்தையாவது படித்தீர்களா? இலங்கை வாழ் தமிழ்மக்கள் இலங்கைக் குடிமக்கள், மனிதர்கள். அவர்களை இலங்கை அரசு விமானக் குண்டுவீச்சு மூலமும், தரைப்படையில் கொத்துக் குண்டு வீச்சு மூலமும் நிரபராதி மக்களைக் கொல்வதை நிறுத்த வேண்டும். மக்களுக்கு எதிரான போரை நிறுத்துக என்பது வேண்டுகோள். அதையும் நாங்கள் இந்தியக் குடிமக்களாக இருப்பதால் எங்களது இந்திய அரசிடம், இலங்கை அரசிடம் வற்புறுத்த வேண்டினோம். இதிலே எது இன, மொழிவெறி, குறுமதி? மனிதர்களைக் கொல்லாதே என்று வேண்டுகிற போது, கொல்பவர்கள் யாராக இருப்பினும் கொலைச் செயலை நிறுத்து என்றுதானே பொருள். தமிழ் கூடப் புரியாத உங்களிடம் வாதிடுவது சிரமம்தான். எங்கள் அல்லது நமது இந்திய அரசிடம் இலங்கை அரசு, சொந்தக் குடிமக்களைக் கொன்றழிக்க முற்பட்டுள்ள மூர்க்கத்தனமான போருக்கு இந்தியாவிலிருந்து படைவீரர்கள், ஆயுதங்கள், போர்க்கருவிகளை அனுப்ப வேண்டாம் எனக் கேட்கிறோம். இந்தியத் துப்பாக்கியால் இந்திய ராணுவ வீரன் சுட்டதால் இலங்கைத் தமிழர் கொல்லப்படு கிறார்கள் என்ற பழி வேண்டாம் என்பது, இனவெறியா? தர்மப் பிச்சை கேட்கும் கோரிக்கையா? இதுபற்றி இலங்கை ராணுவத் தளபதி வெளியிட்ட கருத்தை மட்டும் படிக்கவே மாட்டீர்களா? இலங்கை சிங்கள மக்களின் நாடு எனப் பிரகடனம் செய்துள்ளதையும் படித்துள் ளீர்களா? இல்லையா? விமான, ராணுவத் தாக்குதலால் வீடிழந்து, உயிரைக் காத்துக் கொள்ள குழந்தைகளுடன் தாய்மார் கொட்டும் மழை வாட்டுகிற காட்டுக்குள் ஓடித் தஞ்சம் புகுந்துள்ள செய்தி கேட்டு பசிக்கு உணவும், நோய்க்கு மருந்தும் காந்திபிறந்த நாடு அனுப்பி உதவ வேண்டும் என்று கேட்பது தமிழ் சாவினிசமா? சாகட்டும் என விட்டுத் தொலைக்கக் கூடிய பிசாசு புத்தியா? மனிதாபிமானம் கூட இல்லாத அளவிற்கு ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதலாமா? கொல்வதை நிறுத்துக என்பார் குறுமதியாளர் என்றால் குருதிப்புனல் கண்டும், சூத்திரம் படைப்போர் குள்ள நரிகளாகத்தான் இருக்க வேண்டும். இவ்வளவு மனக் குமுறலையும் தாங்கி வாழும் நாங்கள் என்றாவது நிதானமிழந்து இலங்கையின் மீது படையெடுப்போம், சிங்கள இனத்தை அழிப்போம், இந்தியப் படையை ஏவுக- என்று எப்பொழுதாவது பேசினோமா? சர்வகட்சிக் கூட்டத்தில் ஒருவராவது சிங்களர் களை ஒழிப்போம் என ஒரு சொல் கூறப்பட்டதா? இனவெறியர்களாக இருந்திருந்தால் சிங்களர்களுக்கு எதிரான முழக்கம் வர வேண்டும். இலங்கைத் தமிழர் இலங்கையின் உள்நாட்டு சொந்த வீட்டுவிவகாரம் என்றால், தமிழ்நாட்டு மீனவர்களை இந்தியக் கடலில் இலங்கைக் கப்பற்படை சுட்டு நானூறு தமிழ் மீனவர்கள் கொல்லப்பட்டதும் சொந்த வீட்டுப் பிரச்சினையா? தமிழக மீனவன், இந்தியக் குடிமகனா? இல்லையா? அவனது உயிரை, தொழில் உரிமையை பாதுகாக்க என்னிடம் வரிவாங்கும், என் வாக்கைப் பெற்று அமைந்துள்ள இந்திய அரசுக்கு பொறுப்பு உண்டா? இல்லையா? எனவே சாதிக்கொரு நீதி கூறாதீர்கள். தமிழ் மக்கள், இந்தப் பூப்பந்தில் எங்காறும் தடியடிபட்டும், கசையடியுண்டும் செத்து மடிவது ஏன்? விதியே விதியே தமிழ்ச்சாதியை என் செய நினைத்தாய்? என்று எழுதிய பாரதியார், குறுமதியாளர் என்றால் நாங்களும் அங்குதான் நிற்க விரும்புகிறோம். கொட்டி ஓடும் ரத்த ருசி பார்க்க நீட்டும் குள்ள நரிகளின் நாக்கை ஏன் தொங்கப் போடுகிறது என்பதை அறிவோம். - என்று உலக முழுவதும் ஈழத்தமிழர்களின் நல்வாழ்வை இறைஞ்சிடும் கோடானு கோடித் தமிழர்கள் - பிராமணரல்லாத பெருமக்களின் உள்ளக் குமுறல்களுக்கு - கோரிக்கைகளுக்கு கட்டுரை வடிவம் தந்திருக்கிறார் தா.பாண்டியன். சரி; தாக்குதல்களுக்கு ஆளாகிக் கொல்லப்படும் தமிழர்களைக் காப்பாற்றுங்கள் என்று கோரிக்கை வைத்தால் அது தமிழ் இனவெறி என்று சென்னை வாழ் அறிவு ஜீவி அய்யங்கார் அம்மையார் கண்டிக்கிறார்; கனல் கக்குகிறார். ஆனால் இந்தியாவில் வாழும் மக்கள் அனைவரும் கஷ்டப்படுவதற்கு காரணம் அரசியல்வாதிகள்தான். அரசியல்வாதிகளிடமிருந்து இந்திய மக்களைக் காப்பாற்றுங்கள் - என்று இந்திய ஜனாதிபதியிடம் பலமுறை கோரிக்கை வைத்தேன், அவர் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. அதனால்தான் நடவடிக்கை எடுக்காத ஜனாதிபதியையே - பிரதிபா பாட்டிலையே கொல்லப்போவதாக மிரட்டல் விடுத்தேன் - என்று போலீசாரிடம் சிக்கிக்கொண்ட ஸ்ரீரங்கத்து இன்ஜினியர் அய்யங்கார் ஒருவர் வாக்குமூலம் அளித்திருக்கிறார். "நாட்டில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. மக்கள் அச்சவுணர்வோடு வாழவேண்டியுள்ளது. மக்களுக்கு அடிப்படைத் தேவையான குடிநீர், மின்சாரம் போன்றவற்றை ஆட்சியாளர்களால் கொடுக்க முடியவில்லை. இதற்கு அரசியல்வாதிகள்தான் காரணம். அரசியல் வாதிகளுக்கெல்லாம் தலைவராக இருப்பவர் ஜனாதிபதிதான். ஜனாதிபதி கண்டிப்பானவராக இருந்தால் அரசியல்வாதிகளைத் திருத்த முடியும். இதனால்தான் ஜனாதிபதிக்குக் கொலை மிரட்டல் கடிதம் அனுப்பினேன்" - என்கிறார் ஸ்ரீரங்கத்து அய்யங்கார்! ------------------ஸ்ரீரங்கத்து அய்யங்கார் ஸ்ரீராமும் - சென்னை வாழ் அய்யங்கார் அம்மையாரைப் போல வசதி படைத்தவர்தான். கம்ப்யூட்டர் இன்ஜினீயர் . அதுவும் இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றுகிறவர்! இந்திய மக்களைப் பாதுகாக்கவில்லையே என்ற ஆதங்கம், ஆத்திரம் ஒரு அய்யங்காருக்கு ஏற்பட்டால் - அதற்கு சரியான தீர்வு இந்திய ஜனாதிபதிக்கு கொலை மிரட்டல்கள் விடுவதுதான் என்று நினைத்து ஒருமுறை - இருமுறையல்ல 16 முறைகளுக்குமேல் குடியரசுத் தலைவருக்கு ஈமெயில் மூலம் கொலை மிரட்டல்களை விடுத்திருக்கிறார் அவர்! அது ஸ்ரீரங்கத்து அய்யங்கார் கடைப்பிடித்த (மனு) தர்மசாஸ்திரம்! "ஈ.ழத் தமிழர்களைக் காப்பாற்றுங்கள்" என்று மத்திய அரசிடம் தமிழகத் தலைவர்கள் கோரிக்கை வைத்தால் அது தமிழ் இனவெறி என்கிறார் சென்னை வாழ் அய்யங்கார் அம்மையார். எது எப்படி இருப்பினும் ‘அவாள் நினைத்தால் கொல்வேன்’ என்றும் மிரட்டுவார்கள்! "கொல்லாமல் காப்பாற்றுங்கள்" என்று கோரிக்கை வைப்பவர்களை - குறுமதியாளர் - தமிழ் இனவெறியர் என்றும் சாடுவார்கள். இதுவெல்லாம அவர்களது பிறவிச் சுபாவம்; சாதிப்புத்தி என்பதல்லால் வேறு என்ன?

நன்றி: "முரசொலி" இணையதளம்

உண்ணாவிரதம்: எதற்குக் கூப்பிடுகிறீர்கள் ரஜினியை?

தமிழ் திரையுலகினர் நடத்தும் எந்தப் போராட்டமாக இருந்தாலும் அதில் தவறாமல் கேட்கப்படும் கேள்வி, ‘ரஜினி பங்கேற்பாரா?’
ஈழத் தமிழர் ஆதரவு எனும் உணர்ச்சிப் பூர்வமான போராட்டத்துக்கு திரையுலகினர் ஒன்றுபட்டுக் குரல் கொடுக்கும் இந்த நேரத்தில் மட்டும் இந்தக் கேள்வி எழாமல் இருக்குமா?இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகப் போராட்டம் என்ற குரல் எழத் தொடங்கிய உடனே இந்தக் கேள்வியும் மீடியாக்களால் உருவாக்கப்பட்டுவிட்டது.
ரஜினியை இலங்கைத் தமிழர்களுக்கு எதிரானவராகச் சித்தரிக்க ஒரு கூட்டமே முயன்று கொண்டிருக்கிறது. ஆனால் இந்த விஷயத்தில் ரஜினியின் நிலைப்பாடு தெளிவானது.
‘இலங்கையில் அவதிபடும் தமிழர்களுக்கு விரைவில் நிரந்தர அமைதி கிடைக்க வேண்டும். இலங்கையில் மட்டுமல்ல, உலகின் எந்தப் பகுதியிலும் தமிழர்கள் கஷ்டப்படக்கூடாது என்பதே என் விருப்பம்…’ என்று சில ஆண்டுகளுக்கு முன் ஒரு பேட்டியில் அவர் குறிப்பிட்டிருந்ததை இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன்.
அவரது இந்த பேட்டிக்குப் பிறகு பல சம்பவங்கள் நடந்துவிட்டன. இடையில் இலங்கைத் தமிழர் ஆதரவு என்று பேசினாலே பொடா பாயுமளவுக்கு மோசமான நிலையிருந்தது.இப்போதுதான் திடீரென்று மீண்டும் ஈழத்து மக்களுக்கான ஆதரவு பெருமளவு திரளத் தொடங்கியிருக்கிறது.
இப்போது இந்த பேராட்டத்துக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ள ரஜினி, உண்ணாவிரதத்தில் பங்கேற்கப்போவதாகவும் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், செயலாளர் ராதாரவி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களுக்கு ரஜினியை அழைப்பதெல்லாம் சரிதான்.அங்கே ரஜினியைப் பார்த்த பிறகுதான் இவர்களின் தமிழுணர்வு பீறிட்டுக் கிளம்பும். வாய்க்கு வந்தபடியெல்லாம் உளறத் தொடங்குவார்கள்.
அவரும் ஒரு தமிழர் என்று சொல்லித்தானே அழைக்கிறார்கள்… அவர் மேடைக்கு வந்ததும் எழும் ரசிகர்களின் ஆர்ப்பரிப்பான வரவேற்பையும் கைத்தட்டலையும் பார்த்த பிறகுதான் இவர்களுக்கு, அடடா இவர் பக்கத்து மாநிலத்துக்காரராச்சே, இவ்வளவு தமிழர்களுடைய ஆதரவும் இவருக்கு மட்டுமேவா… என்ற பொறாமை எட்டிப் பார்க்கும்.
அப்போதே விஷமத்தனத்தை ஆரம்பித்துவிடுவார்கள். மேடை நாகரீகமாவது, மண்ணாவது… பேயாட்டம்தான்!
அப்படியெல்லாம் இந்த முறை நடக்காமல் பார்த்துக் கொண்டால்தான் இந்த உண்ணாவிரதத்துக்கு மரியாதை.
காரணம் ரஜினிக்கு நேரும் அவமானம், ஈழத் தமிழனுக்கு ஆதரவு தரும் ஒவ்வொரு தமிழனுக்கும் நேரும் அவமானமாகவே கருதப்படும்!
ரஜினியை உயர்த்தி வைத்துப் பார்க்க இப்படி எழுதவில்லை. அவரது உயரம் உலகமறிந்தது.ரஜினியை எதற்கு இந்த மாதிரி போராட்டத்துக்கு அழைக்கிறார்கள்… ரஜினி வந்து பேசினால் பிரச்சினை தீர்ந்துவிடும் என்றா… இல்லை. உலகத்தின் கவன ஈர்ப்பைப் பெறுவதற்காகத்தான்.
ஆனால் நடப்பது என்ன?
இவர்ள் அழைப்பை பெரிதாய் மதித்து ரஜினி வருவார்… மேடையில் உள்ள துண்டு துக்கடாவுக்குக் கூட மரியாதை செலுத்துவார் (அது அவர் பண்பு!)… உலகின் கவனமே அவர் பக்கம் திரும்பும். அவ்வளவுதான்… இங்குள்ள சத்யராஜுக்கும், சரத்குமாருக்கும், இவர்களுக்கும் கீழ் மட்டத்திலுள்ள நடிகர்களுக்கும் அடிவயிறு பற்றிக் கொண்டு எரியும் பொறாமையில்.
ரஜினியை இவர்கள் வருந்தி வருந்தி அழைக்கும் ஒவ்வொரு போராட்டமும் இப்படித்தான் முடிந்திருக்கிறது.
இந்த முறை ஈழத் தமிழனுக்கு ஆதரவுக் கரங்களை நீட்டும் முன் உங்கள் மனதிலுள்ள பொறாமை அழுக்கை கழுவிவிட்டு ஒன்றுபடுங்கள்… உங்கள் குரல் தூர்ந்து கிடக்கும் உலகின் செவிகளைக் கிழிக்கும்!

இயக்குநர்களின் இயக்குநர் ஸ்ரீதர்!

தமிழ் சினிமாவின் எல்லைகளை விரிவடையச் செய்த படைப்பாளிளுள் முக்கியமானவராகக் கருதப்பட்ட இயக்குநர் ஸ்ரீதர் இன்று காலை 10 மணிக்கு மரணமடைந்தார். அவருக்கு வயது 80.எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல், ஜெமினி என சிகரங்களை இயக்கிய பெருமைக்குரிய ஸ்ரீதர் சில வருடங்களுக்கு முன் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார். அத்துடன் திரைப்படப் பணிகளிலிருந்து முழுவதுமாக ஒதுங்கிக் கொண்டார்.கடும் உடல்நலக் குறைவு காரணமாக சில தினங்களுக்கு முன் அவரை அடையாறு மலர் மருத்துவமனையில் சேர்த்திருந்தனர்.ஒரு சாதாரண வசனகர்த்தாவாக தனது திரை வாழ்க்கையைத் தொடங்கிய ஸ்ரீதர், பழைய கலாச்சாரத்தில் ஊறிப்போயிருந்த தமிழ் சினிமாவுக்கு அறுபதுகளில் புதுரத்தம் பாய்ச்சியவர்.அதுவரை வசனங்களில் மட்டுமே வாழ்ந்து கொண்டிருந்த சினிமாவை, உணர்வுகளால் வாழ வைத்த அற்புதக் கலைஞன் ஸ்ரீதர்.அவரது இயக்கத்தில் உருவான கல்யாணப் பரிசையும், நெஞ்சில் ஓர் ஆலயத்தையும் இன்றும் திரையுலகம் கொண்டாடுகிறது. 50 ஆண்டுகளுக்கு முந்தைய படங்கள்தான் என்றாலும் அவற்றின் திரைக்கதையில் தெரியும் புத்துணர்ச்சியை வேறு படங்களில் பார்ப்பது அரிது.நெஞ்சில் ஓர் ஆலயம் திரைப்படம் தமிழில் போகுமா என்ற சந்தேகத்தோடு சிலர் பார்த்தபோது, அதன் தமிழ் வடிவம் மட்டுமல்ல, தில் ஏக் மந்திர் என்ற பெயரில் அதன் இந்தி வடிவத்தையும் சூப்பர் ஹிட் ஆக்கி சாதனைப் படைத்தவர் ஸ்ரீதர்.1961-ல் தனது சொந்தப் பட நிறுவனம் சித்ராலயாவைத் தொடங்கிய ஸ்ரீதர் 30 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுதினார். அவரால் சூப்பர் ஸ்டார்களையும் இயக்க முடிந்தது, புதுமுகங்களையும் எளிதாக நடிக்க வைக்க முடிந்தது.இன்று முன்னணி நடிகராகத் திகழும் விக்ரம் தனது வாழ்க்கையைத் துவங்கியது ஸ்ரீதரின் தந்துவிட்டேன் என்னை படம் மூலம்தான்!கமர்ஷியல், கிளாஸிக் என தொட்டது அனைத்திலும் வெற்றி பெற்ற உன்னதக் கலைஞர் ஸ்ரீதர்.தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக ரஜினி உருவெடுத்துக் கொண்டிருந்த நேரத்தில், அவரையும் கமல்ஹாசனையும் வைத்து ஸ்ரீதர் உருவாக்கிய இளமை ஊஞ்சலாடுகிறது திரைப்படம் தமிழ் சினிமாவின் மைல் கல்லாக அமைந்தது.பின்னர் ஸ்ரீதருக்காகவே ரஜினி துடிக்கும் கரங்கள் எனும் படத்தில் நடித்துக் கொடுத்தார். படம் வணிக ரீதியில் பெரிய வெற்றி. ரஜினிக்கு 25 ஆண்டுகளுக்கு முன்பே சென்னை அலங்கார் திரையரங்க வளாகத்தில் 90 அடி உயர கட் அவுட் வைத்து அவரை சூப்பர் ஸ்டார் என்று அழுத்தம் திருத்தமாக நிரூபித்தவர் ஸ்ரீதர்.மக்கள் திலகம் எம்ஜிஆரை வைத்து அவர் இயக்கிய உரிமைக்குரல், மீனவ நண்பன் இரண்டுமே வசூலில் சிகரம் தொட்டவை.அதே போல நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் ஆகியோரின் திரைப் பயணத்தில் மறக்க முடியாத பல மைல் கற்களைப் படமாகத் தந்தவர் ஸ்ரீதர்.சிவாஜி கணேசனின் சிவந்த மண் திரைப்படத்தை தமிழ் திரையுலகம் மறக்கமுடியுமா?திரையுலகிலிருந்து அவர் முழுமையாக விலகினாலும் அவர் மனம் கடைசி மூச்சு நிற்கும்வரை சினிமாவையே சுவாசித்துக் கொண்டிருந்தது. தனது 78-வது வயதிலும் கூட சினிமாவுக்காக திரைக்கதையை உருவாக்கிக் கொண்டிருந்தவர் ஸ்ரீதர். இன்றைய முன்னணி இயக்குநர்கள் பி.வாசு, இயக்குநராக இருந்து நடிகராகிவிட்ட சந்தானபாரதி, சிவி ராஜேந்திரன் என பல இயக்குநர்களை உருவாக்கியவர்.தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் வெற்றிக் கொடி கட்டியவர் ஸ்ரீதர்.கலைஞர் இரங்கல்:ஸ்ரீதரின் மறைவு உண்மையாகவே தமிழ் திரையுலகுக்கு பெரும் இழப்பு என கலைஞர் தனது இரங்கலில் தெரிவித்துள்ளார்.கலையுலகம் கண்ணீர்!இயக்குநர்களின் இயக்குநரான ஸ்ரீதரின் மறைவுக்கு தமிழ் திரையுலகமே கண்ணீர் அஞ்சலி செலுத்துவதாக இயக்குநரும் தமிழ் திரைப்படதயாரிப்பாளர் சங்கத் தலைவருமான ராம நாராயணன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா படையினரின் ஆறுமுனை முன்நகர்வுகள் புலிகளால் முறியடிப்பு

நாச்சிக்குடா தொடக்கம் அக்கராயன் வரையிலான பகுதிகளில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட ஆறுமுனை முன்நகர்வுகளுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் உக்கிரமான எதிர்த்தாக்குதலை நடத்தி படையினரின் நகர்வுகளை முடக்கியுள்ளனர். இதில் படையினருக்கு பாரிய அழிவுகள் ஏற்பட்டுள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை (17.10.08) தொடக்கம் இன்று திங்கட்கிழமை காலை வரை சிறிலங்கா படையினரின் ஆறுமுனை முன்நகர்வுகளுக்கு எதிராக விடுதலைப் புலிகள் உக்கிர தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர்.
வான்படையின் எம்.ஐ-24 ரக உலங்குவானூர்திகள், கிபீர், மிக்-27 ரக வானூர்திகள், வெடிகணை, ஆட்டிலறி எறிகணை, இலகு மற்றும் கனரக ஆயுதங்களின் செறிவான சூட்டாதரவுடன் சிறிலங்கா படையினர் முன்நகர்வுகளை மேற்கொண்டனர்.
இதற்கு எதிராக விடுதலைப் புலிகள் கண்ணிவெடிகள், பொறிவெடி வயல்களை உருவாக்கி கொலை வலயங்களுக்குள் எதிரிகளை இழுத்து பெரும் தொகையில் கொன்றொழிக்கும் நடவடிக்கையில் பெருவெற்றி கண்டுள்ளதாக களமுனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் படைத்தரப்புக்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன.
தொடர்ந்து மோதல்கள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் இதுவரை இடம்பெற்ற மோதல்களில் 12 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளதாகவும் களமுனை தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இதனிடையே தமது தரப்பில் 33 படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் மூவரைக் காணவில்லை என்றும் 100 பேர் காயமடைந்துள்ளதாகவும் சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
கிளிநொச்சியிலிருந்து தென்மேற்கு திசையில் அக்காரயன் 15 கிலோமீற்றர் தொலைவிலும் நாச்சிக்குடா 35 கிலோமீற்றர் தொலைவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈழப்பிரச்சினை அடுத்து என்ன?

ஈழத் தமிழர்கள் திட்டமிடப்பட்ட வகையில் சிங்களப் பேரினவாத அரசால் அழிக்கப்பட்டு வருவதை எதிர்த்து தமிழ்நாடே எரிமலையாகக் கொந்தளித்து எழுந்துவிட்டது. ஒவ்வொரு கட்சியும் அதனதன் பாணியில் போராட்டத்தை நடத்தி வருகின்றன.இராமேசுவரத்தில் தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், விநியோகஸ்தர்கள், திரைப்பட அரங்கின் உரிமையாளர்கள், திரைப்படத் தொழிலாளர்கள் நேற்று மாலை ஒன்று கூடி இராமேசுவரத்தில் நடத்திய பேரணியும், எழுச்சிப் பொதுக்கூட்டமும் மகத்தானவைகளாக அமைந்துவிட்டன.போர்ப்பரணி என்று சொல்லும் அளவுக்கு அதன் எழுச்சி மண்ணையும், விண்ணையும் துழாவி நின்றுள்ளது. நடிகர், நடிகைகளும் அடுத்து தலைநகரில் தங்கள் பங்குக்கான எழுச்சியை வெளிப்படுத்த உள்ளனர்.இவற்றிற்குப் பிறகாவது இந்து, துக்ளக் பார்ப்பன வகையறாக்கள் - ஈழத் தமிழர்ப் பிரச்சினைக்கு தமிழ்நாட்டில் பெரும்பாலோரிடம் ஆதரவு இல்லை என்று காட்ட முயலும் பித்தலாட்டத்தின் வாலைச் சுருட்டிக்கொள்ளவேண்டும் என்று எச்சரிக்கின்றோம்.ஏதோ அரசியல் ஆதாயத்துக்காக அரசியல் கட்சிகள் மேற் கொள்ளும் செயல்பாடுகள் என்று திசை திருப்பும் தில்லுமுல்லு தனத்தின் கடையைக் கட்டிக்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.கருத்துரிமை என்ற பெயரால் தமிழர்களின் எழுச்சியைக் கொச்சைப்படுத்தினால், அவற்றை எதிர்க்கும் உரிமை என்ற பெயரால் தமிழர்கள் தங்கள் நடவடிக்கைகைகளைத் தொடரும் நிலை ஏற்படத்தானே செய்யும்.கொலைக் குற்றஞ் சுமத்தப்பட்ட சங்கராச்சாரியாரை ஆந்திரா வரை சென்று வரவேற்று தம் சொந்தக் காரில் அழைத்து வந்து, காஞ்சி மடத்தில் மரியாதையாக விட்டுச் செல்லும் இந்து ராம்கள், அழிக்கப்படும் ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுப்பதை குறுகிய வாதம் (Chavinism) என்று சொல்வதுதான் வேடிக்கை! தான் திருடி பிறரைத் திருடி என்று சொல்லுவார் என்கிற பழமொழிதான் நினைவிற்கு வருகிறது.தமிழ்நாடு முதலமைச்சர் கூட்டிய அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு நம்பிக்கையூட்டும் விளைவுகள் ஏற்பட்டுள்ளன.இலங்கைத் தூதரிடம் வெளியுறவுத் துறை அமைச்சர் பேசியதும், இலங்கை அதிபர் ராஜபக்சே அவசர அவசரமாக இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங்கிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டதும், எந்த விலை கொடுத்தேனும் ஈழத் தமிழர்களுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்படவேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட தமிழின மக்களுக்குத் தேவையான பொருள்கள் விநியோகம் செய்யப்படுவது உறுதிப்படுத்தப்படவேண்டும் என்றும் இந்தியப் பிரதமர், இலங்கை அதிபரிடம் வலியுறுத்தியது எல்லாம் உலகத் தமிழர் மத்தியிலே நல்லதோர் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன.அதேபோல, பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு அய்.நா. மன்றத்தின் சார்பில் 750 டன் உணவு வழங்கப்பட்டது என்பதும் ஆறுதல் அளிக்கும் தகவல்களாகும்.என்றாலும், ஈழத் தமிழர்களுக்கு எதிரான போர் நிறுத் தப்படும் - நிறுத்தப்பட்டுவிட்டது என்று இலங்கை அதிபரிடமி ருந்து அதிகாரப்பூர்வமான தகவல் இதுவரை கிடைக்கப் பெறவில்லை.தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல்வர் கலைஞரிடம் தங்கள் பதவி விலகல் கடிதங்களைக் கொடுத்துக் கொண்டு இருக்கின்றனர். அனைத்துக்கட்சிக் கூட்டம் கொடுத்த கெடுவரை தமிழகம் காத்துக் கொண்டிருக்கும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இடையில் என்ன நடக்கப் போகிறது என்பதை உலக நாடுகளும் கவனித்துக் கொண்டுதானி ருக்கிறது.ஒரு சார்பாக யுத்த நிறுத்தத்தை விலக்கிக் கொண்டது இலங்கை அரசுதான். எனவே, அதுவே முன்வந்து போர் நிறுத்தத்தை அறிவிக்கக் கடமைப்பட்டுள்ளது.புத்திசாலித்தனமாக இலங்கை அரசு நடந்துகொள்ளத் தவறுமேயானால், விடுதலைப்புலிகளை அழிப்பது என்கிற பெயரால், ஈழத் தமிழர்களை முற்றாக அழிக்கும் தீயசெயல்கள் தொடருமேயானால், அடுத்து இந்திய அரசு மேற்கொள்ள வேண்டிய நிலைப்பாடு என்ன என்பதுதான் முக்கியமான தாகும்.அகதிகள் பிரச்சினையைக் காட்டி வங்கத்தேசப் பிரச்சினையில் பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான அன்றைய இந்தியா எப்படி நடந்துகொண்டது என்கிற முன்னுதாரணம் எல்லாம் ஏற்கெனவேயிருக்கிறது.உலக நாடுகளின் மத்தியில் இலங்கை அரசு மேற்கொண்டு வரும் இனப் படுகொலையை (Genocide) எடுத்துச் சொல்லும் கடமையும் இந்தியாவுக்கு இருக்கிறது.எல்லாவற்றிற்கும் இந்திய அரசு தயாராக இருக்கும் என்று நம்புவோமாக!

"விடுதலை" தலையங்கம் 20-10-2008
ராமேஸ்வரம் பேச்சு: சீமான், அமீருக்கு தங்கபாலு கண்டனம்

ராமேஸ்வரம் பொதுக் கூட்டத்தில் மத்திய அரசை தாக்கிப் பேசிய இயக்குனர்கள் சீமான் மற்றும் அமீருக்கு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கண்டனம் தெரிவித்துள்ளார்.மேலும் அப்பாவி தமிழர்களின் வாழ்வுரிமையை மீட்டு தரும் சக்தி மத்திய அரசுக்கு மட்டுமே உண்டு. வாய் சவடால் பேசுவோருக்கு அந்த தகுதி இல்லை என்று கண்டித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:ஈழத் தமிழர்கள் பிரச்சினை தீர்வுகாக இந்திரா காந்தி காலத்தில் தொடங்கி ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த காலத்திலும் எடுத்த முயற்சிகள் ஏராளம்.தலைவர் ராஜீவ் காந்தி - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தின் மூலம் இலங்கை தமிழர் வாழ்வில் புதிய அத்தியாயத்தை உருவாக்கி முனைந்து செயல்பட்ட நேரத்தில் தமிழின துரோகிகளால் தலைவர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார்.மாபெரும் தியாகத்தைச் செய்த காங்கிரஸ் கட்சி ஒரு போதும் அக்கொலை பாதகர்களை, அவர்களுக்கு துணை போகிற இயக்கத்தை (விடுதலை புலிகளை) அக்கொலையை நியாயப்படுத்துகிற கொடுமையாளர்களை மன்னிக்கவோ, மறக்கவோ முடியாது.சோனியா வழிகாட்டுதலில் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அரசு கடந்த நான்கரை ஆண்டுகளாக இலங்கை தமிழர் பிரச்சினையில் நிரந்தரத் தீர்வுக்கு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.தமிழ்நாட்டில் ஆங்காங்கே தடை செய்யப்பட்ட விடுதலை புலிகளை ஆதரித்தும், அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தும் பல்வேறு நிலைகளை எடுப்பவர்களை தமிழ் இனம் மட்டுமல்ல எந்த ஒரு சமூகமும் அங்கீகரிக்காது.இலங்கை பிரச்சனையில் மத்திய அரசும், பிரதமர் மன்மோகன்சிங்கும் எடுத்து வரும் நடவடிக்கைகள் நம்பிக்கை ஊட்டுவதாகவும், அதை வரவேற்பதாகவும் தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.நேற்று ராமேஸ்வரத்தில் திரை உலகத்தினரால் நடத்தப்பட்ட பேரணி பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட சீமான் அமீர் போன்றவர்கள் தமிழினத்தை காக்கின்ற மத்திய அரசையும், இலங்கை தமிழர்களுக்கு பாதுகாப்பு அரணாகவே இருந்து பல்வேறு நடவடிக்கைகளை தங்கள் காலத்தில் செயல்படுத்திய இந்திரா காந்தியையும் ராஜீவ் காந்தியையும், அவரது படுகொலையை கொச்சைப்படுத்தியும், நியாயம் கற்பித்தும் பேசியதை தமிழ்நாடு காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது.வன்முறைப் பேச்சை, தடுத்து நிறுத்த வேண்டியது ஒவ்வொரு தமிழின உணர்வாளர்களின் கடமையாகும்.அப்பாவி தமிழ் மக்களின் வாழ்வுரிமையைப் பெற்றுத் தரும் சக்தி இந்திய அரசுக்கு மட்டுமே உண்டு. வெறும் வாய்ச் சவடால் பேசுவோருக்கு அந்த தகுதியும் உரிமையும் கிடையாது. அவர்களால் தமிழர்களை காப்பாற்றவும் முடியாது.இந்த நிலையில் இந்திய அரசையும், அதன் நடவடிக்கைகளையும் குறை கூற யாருக்கும் அருகதை இல்லை என்று கூறியுள்ளார்.

Sunday, October 19, 2008

அமெரிக்க, இந்திய அரசு மாற்றங்களுக்காக காத்திருக்கும் விடுதலைப் புலிகளின் பதிலடி அடுத்த ஆண்டிலேயே!:


அனைத்துலக அரசியலில் தீர்க்கமான ஞானம் கொண்ட பிரபாகரன், தனது அடுத்து நகர்வினை முன்னெடுப்பதற்கு அமெரிக்க, இந்திய அரசு மாற்றங்களை எதிர்பார்த்து காத்திருக்கின்றார். அந்தவகையில், சிறிலங்கா அரசின் தற்போதைய போருக்கு அடுத்த வருடமே புலிகள் பதிலளிப்பார்கள் என்று பிரபல ஊடகவியலாளர் அனிதா பிரதாப் எதிர்வு கூறியுள்ளார்.
"புதினம்" இணையத்தளத்துக்கு வழங்கிய பிரத்தியேக பேட்டியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களை 1984 ஆம் ஆண்டு இந்திய சஞ்சிகை ஒன்றுக்காக முதன் முதலாக செவ்வி கண்டவர் அனிதா பிரதாப். இந்திய இராணுவம் இலங்கையில் நிலைகொண்டிருந்த காலப்பகுதியில் இலங்கையில் போர் இடம்பெற்ற பகுதிகளில் தனது பணியை மேற்கொண்டிருந்த அனிதா பிரதாப், இலங்கையில் தனது ஊடகவியல் அனுபவம் தொடர்பில் "இரத்தத்தீவு" என்ற நூலை எழுதியிருந்தார்.இந்தியாவின் முன்னணி ஊடகங்கள் பலவற்றில் பணியாற்றிய அனிதா பிரதாப், 1999 ஆம் ஆண்டுவரை சி.என்.என். தொலைக்காட்சியின் தெற்காசியப் பிரிவின் செய்திப் பணிப்பாளராக கடமையாற்றினார்.பேட்டியின் முழுவிவரம் வருமாறு:இலங்கையில் பரவலடைந்துள்ள வன்முறைகளின் முடிவு எங்கே என்று நீங்கள் கருதுகின்றீர்கள்?இலங்கையில் இன வன்முறை என்பது கொடிய வளைவுகளாக அதிகரித்துக்கொண்டே உள்ளன. ஒருகாலத்தில் வன்முறைகள் உச்சக்கட்டத்தில் காணப்படும். பின்னர், குறையும். பிறகு, மீண்டும் அதிகரிக்கும். இவை உடனடியாக முடிவுக்கு வரும் என்று எனக்குத் தெரியவில்லை. தற்போதுள்ள நிலையில் மாற்றம் ஏற்படுமானால், இன்னும் அதிகரிக்கும் என்றே நான் நினைக்கின்றேன்.தற்போது தனக்குச் சாதகமான சூழ்நிலை நிலவுவதாக சிறிலங்கா அரசு கருதுகின்றது. அதனால், அது தனது நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுப்பதில் நாட்டமாகவுள்ளது.விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக பலமிழக்கச்செய்வதன் மூலம் அவர்களை பேச்சு மேசைக்கு கொண்டு வரலாம் என்று சிறிலங்கா அரசு எண்ணுகிறது என்று நான் நினைக்கின்றேன். கடந்த அரசுகளும் இதேபோன்றுதான் செயற்பட்டன. ஆனால், அவர்கள் நினைத்தது போன்று நடக்கவில்லை.
"என்றாவது ஒருநாள் நான் இலங்கைக்குச் சென்று பிரபாகரனை சந்தித்து அவரது வாழ்க்கை வரலாறை எழுதவேண்டும் என்ற நம்பிக்கையுடன் உள்ளேன்."
அரசு இதனை மறுத்திருக்கின்றது. ஆனால், அது உண்மை என்றால், அரச தலைவரின் உலங்குவானூர்தி அணி மீதான தாக்குதல் பாரதூரமான விடயம். இந்த தாக்குதலானது, சிறிலங்கா அரசின் "இதயம்" வரை அண்மித்து தாக்குதல் நடத்தக்கூடிய சக்தியை விடுதலைப் புலிகள் கொண்டுள்ளார்கள் என்பதை காட்டியுள்ளது.புலிகளின் இவ்வாறான தாக்குதல்களுக்கு பதிலளிப்பதானால், அவர்களை முறியடிக்கும் முயற்சியில் அரசு இன்னமும் கூடுதலாக செயற்பட வேண்டியிருக்கின்றது.ஆனால், அவ்வாறான அரசின் பதில் நடவடிக்கையில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டால்- மக்கள் ஆதரவின் மூலம்- விடுதலைப் புலிகள் மட்டுமே பலம் பெற்றுக்கொள்வார்கள்.இலங்கையில் நிலவும் தற்போதைய இராணுவ நிலைமை குறித்து என்ன நினைக்கின்றீர்கள்? விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக பலமிழந்து விட்டார்கள் என்று கருதுகின்றீர்களா?ஆம். விடுதலைப் புலிகள் பலமிழந்து விட்டார்கள் என்ற கருத்துநிலை ஒன்று உள்ளது.ஆனால், கடந்த காலத்தை எடுத்துக்கொண்டால், நிகழ்காலம் தமக்கு பாதகமாக அமையும்போதெல்லாம் புலிகள் தமது நடவடிக்கைகளை 'அடக்கி வாசித்துள்ளார்கள்'.ஆனால், அக்காலப்பகுதியில் அவர்கள் சோம்பல் முறித்துக்கொண்டோ- நேரத்தை வீணடித்துக்கொண்டோ இருப்பதில்லை.அந்தவகையில், அவர்கள் தற்போது பெரும் தாக்குதலுக்கு தயாராகிக்கொண்டிருக்கின்றார்கள். அதற்கு தம்மை ஒழுங்கமைத்துக்கொண்டிருக்கின்றார்கள். மீண்டும் எழுந்துவர தயாராகிக்கொண்டிருக்கின்றார்கள்.பிரபாகரன் பொறுமையான மனிதர். அவர் நேரத்தை வீணடித்து நான் பார்த்ததே இல்லை. அவரது மூளை ஏதாவது ஒருவிடயத்தை நோக்கி எந்நேரமும் துடித்துக்கொண்டே இருக்கும்.விடுதலைப் புலிகள் இயக்கம் மிகச்சிறந்ததொரு கெரில்லா அமைப்பு.ஆனால், நாட்டின் வலிமை குறையும் நேரங்களில், விடுதலைப் புலிகள் மரபுவழி இராணுவமாக மாறி சமரிட்டார்கள்.இந்த வழியை 1990 களின் ஆரம்பப் பகுதிகளில் முயற்சித்த பிரபாகரன், இதனைத் தொடரமுடியாது என்பதை உணர்ந்துகொண்டார். புலிகளிடம் உள்ள வளங்களைப் பொறுத்தவரை இது மிகவும் விலை மதிப்பானது என்பதையும் விளங்கிக்கொண்டார்.இராணுவம் எல்லா இடங்களிலும் ஏககாலத்தில் காணப்படும்போது புலிகள் ஒரு கெரில்லா அமைப்பாக இருந்து, தமது நேரத்தை நடவடிக்கைகளை மீளத்திட்டமிடுவதிலும் தம்மை மீள ஒருங்கமைத்துக்கொள்வதிலும் செலவிடுகின்றார்கள்.இதனை இராணுவ வெற்றியாக அரசு கருதுவது பாரதூரமான பிழையாகும்.வானின் நீலத்தை கிழித்துக்கொண்டு வரும் மின்னல் போன்று சுருக்கமாகவும் கூர்மையாகவும் தமது தாக்குதல்களை நடத்துவதில் விடுதலைப் புலிகள் வல்லவர்கள்.ஆகவே, புலிகளை அடிமட்ட நிலைக்கு கொண்டுவந்துவிட்டோம் என்று அரசு பிழையான முடிவுக்கு வருவது சரி என்று எனக்குப்படவில்லை.விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடத்தப்படும் தற்போதைய போரில் சிறிலங்கா அரசு தனது இலக்கை அடைந்துவிட்டதாக நீங்கள் கருதுகின்றீர்களா?அரசாங்கம் என்பது போர் தொடர்பாகவே சிந்திக்கக்கூடாது. போரை நான் வெறுக்கின்றேன். போருக்கு ஆதரவளிக்க என்னால் முடியாது. தனது நாட்டு மக்களுக்கு எதிராக ஒரு போரை நடத்துவது தொடர்பாக எந்த ஒரு அரசும் சிந்திக்கவே கூடாது.ஆனால், இலங்கையில் அது நடைபெறுகின்றது. அரசு, தனது எதிரிகளுக்கு எதிராக மட்டுமல்லாமல் தனது சொந்த மக்களுக்கு எதிரான- கீழ்த்தரமான- ஒரு போரை நடத்திவருகின்றது.
"இன்றைய உலகில் முழுமையான ஒழுக்கத்துடனும் தனது தலைமைக்கு விசுவாசமாகவும் ஒரு விடுதலை அமைப்பு உள்ளதென்றால் அது விடுதலைப் புலிகள் இயக்கம் ஒன்றேதான்."
நான் அரசாங்கத்தில் இல்லை. அப்படி இருந்திருந்தால், போரை நடத்துவதற்கான கட்டாய நிலைக்கு நான் தள்ளப்பட்டால், அமைதியை கொண்டுவருவதற்கான பேச்சுக்களுக்கு ஒரு கருவியாகவே போரை- கடைசி தெரிவாக- பயன்படுத்தியிருப்பேன்.அமைதியும் சுபீட்சமும்தான் எந்த அரசினதும் இலக்காக இருக்கமுடியும். போர் என்பதன் அர்த்தம் முடிவு. போர் எனப்படுவது ஒரு நாட்டின் அமைதிக்கும் சுபீட்சத்துக்கும் உறுதி நிலைக்குமான முடிவாகவே இருக்கமுடியும்.இலங்கையைப் பொறுத்தவரை போர்தான் போருக்கு முடிவாக இருக்கமுடியும் போல தெரிகின்றது. பல தனிநபர்களினதும் குழுக்களினதும் விருப்பத்துக்கு அமையவே போர் தொடரப்படுகின்றது.அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் எதிர்காலத்தில் உடனடிப் பேச்சுக்கள் ஆரம்பமாகும் சாத்தியங்கள் உள்ளனவா?நிச்சயமாக நடைபெறும். ஆனால், இந்த வருடம் அல்ல. தமது அதிகாரத்தை இழந்துகொண்டிருக்கும் தலைவர்களைக்கொண்ட இரண்டு நாடுகள் இலங்கையில் அமைதியை ஏற்படுத்துவதில் பெரும்பங்கு வகிக்கின்றன என்பதை பலர் உணரவில்லை. ஆம். இந்தியாவும் அமெரிக்காவும்தான் அவை.இந்த ஆண்டுடன் அமெரிக்காவில் புஷ் பதவி இழக்கின்றார். இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலுடன் புதிய அரசியல் முன்னணி ஆட்சிக்கு வரவுள்ளது.ஆகவே, இன்னும் ஒரு வருடத்துக்குள் சிறிலங்காவில் அமைதிப்பேச்சு எதுவும் நடைபெறப்போவதில்லை. தற்போது ஏற்பட்டிருப்பது ஒரு வெற்றிடமான காலப்பகுதி.சிறிலங்கா அரசு, வேகமாகவும் உக்கிரமாகவும் போரில் இறங்கியிருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். முக்கியமாக, வரப்போகும் மழை காலத்துக்குப் பின்னர் போரை மேலும் தீவிரப்படுத்தும்.தற்போதைய சூழ்நிலையில் இந்தியா என்ன செய்யவேண்டும் என்று நீங்கள் கருதுகின்றீர்கள்?இலங்கைப் பிரச்சினை தொடர்பில் இந்தியா மிகவும் கவலை கொண்டுள்ளது. இந்திய அமைதிப்படை விவகாரத்துக்குப் பின்னர் இலங்கையில் நேரடியான இராணுவத் தலையீட்டை மேற்கொள்ள இந்தியா தீவிரமாக இல்லை.ஆனால், பிராந்தியம், பாதுகாப்பு, உபகண்ட உறுதிநிலை ஆகியவை தொடர்பிலேயே இந்தியா, இலங்கை விவகாரத்தில் மிகவும் தீவிரமாகவுள்ளது.ஆனால், இலங்கையில் அமைதிப்பேச்சுக்களுக்கு அனுசரணை வழங்குமளவுக்கு இந்தியாவில் தற்போது ஆட்சியில் உள்ள அரசுக்கு விருப்பமோ நேரமோ இல்லை.அதற்காக, இந்தியா முற்றுமுழுதாக இலங்கை விவகாரத்திலிருந்து விலகி விட்டதாக அது அர்த்தமாகிவிடாது. இலங்கையை முழுமையாக போர் சூழ்ந்தநிலை இருக்கக்கூடாது என்பதில் இந்தியா தெளிவாக இருக்கின்றது. அண்மையில் இலங்கைக்கான இந்திய உயர்மட்டக்குழுவினரின் திடீர்ப் பயணம், அதன்பின்னர் வெளியான இந்தியாவின் இராணுவ உதவி குறித்தான செய்தி ஆகியவை தொடர்பான உங்கள் கருத்து என்ன?நான் மேற்கூறிய காரணங்களே இந்தப் பயணத்தின் நோக்கமாகும். உயர்மட்டக்குழுவினரின் இந்த வருகை வழமையாக நடைபெறுகின்றதொரு பயணமோ அல்லது பொதுமக்கள் தொடர்பான பயணமோ அல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.இந்திய அரசானது அரசியல் குழப்பநிலைக்குள் சிக்கி, தற்போதைய ஆட்சியாளர்கள் அதிகாரத்தை இழந்து செல்லவேண்டிய நிலையில் தேர்தலை எதிர்நோக்கி வங்குரோத்தான நிலையில் உள்ளது என்ற கணிப்பீடு சிங்கள அதிகாரப்பீடத்தின் மத்தியில் உள்ளது என்பது இந்திய அரசுக்கு தெரியும்.இந்தியாவின் இந்த நிலை சிங்கள ஆட்சிப்பீடத்தின் ஒரு பகுதியினருக்கும் பல 'கண்டுபிடிப்புக்களுக்கு' வித்திட்டிருக்கின்றது. இந்த கண்டுபிடிப்புக்களுக்கு எதிரான- கடுமையான- தனது எச்சரிக்கையை விடுப்பதற்கே இந்திய உயர்மட்டக்குழு அண்மையில் கொழும்புக்கு சென்றிருந்தது.விடுதலைப் புலிகளினதோ சிறிலங்கா அரசினதோ ஆதிக்கநிலையை இந்தியா விரும்பவில்லை.வெகுதூரத்திலுள்ள அமைதி உடன்பாட்டால் இலங்கையில் அமைதிக்காக ஏற்பட்டுள்ள வெற்றிடத்தில், வரையறைக்குட்பட்ட வன்முறைகளை கடைப்பிடிப்பதன் மூலம் அரசும் புலிகளும் சமபலத்தை பேணிக்கொள்ளட்டும். நிலைமை கைமீறிப்போகுமளவுக்கு பாரிய போர் ஏற்பட்டுவிடக்கூடாது.இதுவே இந்தியாவின் பாதுகாப்புத்தரப்பினதும் வெளிவிவகாரத் தரப்பினதும் இலங்கை தொடர்பான பார்வையும் எதிர்பார்ப்பும் ஆகும்.
"பிரபாகரன் பொறுமையான மனிதர். அவர் நேரத்தை வீணடித்து நான் பார்த்ததே இல்லை. அவரது மூளை ஏதாவது ஒருவிடயத்தை நோக்கி எந்நேரமும் துடித்துக்கொண்டே இருக்கும்."
தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்பான மேற்கு நாடுகளின் பார்வையில் கொள்கை மாற்றங்கள் ஏதாவது ஏற்பட்டுள்ளனவா? கனடாவிலும் இத்தாலியிலும் அண்மையில் ஈழத்தமிழ் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்ட சம்பவங்களின் பின்னணியில், இது தொடர்பில் உங்கள் விளக்கம் என்ன?புஷ் ஆரம்பித்த பயங்கரவாதத்துக்கு எதிரான போரினால், சுதந்திரத்துக்காகப் போராடும் அமைப்புக்கள் உட்பட அனைத்து குழுக்களும் பயங்கரவாத அமைப்புக்கள் என்ற பெயருக்குள் அடக்கப்பட்ட மிகப்பெரிய தவறு இடம்பெற்றிருக்கிறது. பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தப் போர் இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் நடைபெற்றிருக்குமானால், நெல்சன் மண்டேலா உலகின் மிகப்பயங்கரமான தீவிரவாதியாக முத்திரை குத்தப்பட்டு இன்னமும் சிறைவாசம் அனுபவித்துக்கொண்டிருப்பார். அதேவேளை, மண்டேலா அண்மையில்தான் பயங்கரவாதிகளின் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.பயங்கரவாதத்துக்கு எதிரான போர் எனப்படுவது பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளையும் விடுதலை அமைப்புக்களின் நடவடிக்கைகளையும் வேறுபடுத்திப் பார்க்கவில்லை. நோர்வேயின் பிரதி அமைச்சரும் இலங்கையின் அமைதி முயற்சிகளின் அனுசரணையாளருமான விதார் ஹெல்கிசன் இது தொடர்பில் அருமையான ஆய்வறிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளார்.ஆகவே, உலகின் பார்வையில் விடுதலை அமைப்புக்களும் பயங்கரவாத அமைப்புக்களாக காணப்படுகின்றன. அந்தவகையில், விடுதலைப் புலிகள் அமைப்பும் பயங்கரவாத அமைப்பாக கருதப்பட்டு பலநாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளன. இவ்வாறு பயங்கரவாத அமைப்புக்களாக சித்தரிக்கப்பட்ட அமைப்புக்களுடன் அமைதிப்பேச்சுக்களை நடத்த மறுத்து பல நாடுகள் கதவடைத்துள்ளன. இந்த நடவடிக்கை விடுதலை அமைப்புக்களை அழித்தொழிக்க முயற்சித்துவரும் அரசுகளின் கைதுகளை பலப்படுத்தியுள்ளன.தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பில் என்ன நினைக்கின்றீர்கள்?தமிழ்மக்களுக்கு விடுதலைப் புலிகள் தொடர்ந்து பக்கபலமாக உள்ளார்கள்.பயங்கரவாதம் தொடர்பில் பேசும் ஐக்கிய நாடுகள் சபையும் ஏனைய நாடுகளும் பயங்கரவாதத்துக்கு இதுவரை காலமும் ஒரு வரைவிலக்கணம் கொடுக்கவில்லையே என்று நீங்கள் எப்போதாவது ஆச்சரியப்பட்டதுண்டா? அந்தச் சொல்லை விளக்குவதில் அப்படி என்ன கஷ்டம் இருக்கின்றது?அப்பாவி மக்களை காயப்படுத்துவதோ கொலை செய்வதோ அல்லது அவர்களின் உடமைகளுக்குச் சேதம் விளைவிப்பதோ அவை தொடர்பான எதுவும் பயங்கரவாதமே ஆகும். அப்படியானால், எல்லா நாடுகளும் சேர்ந்து ஏன் இதனை வரைவிலக்கணமாக கொள்ளக்கூடாது.ஏனெனில், சுருக்கமாக- தெளிவாக- அர்த்தமளிக்கும் இந்த வரைவிலக்கணம் பல நாடுகளுக்கு பயங்கரவாதம் தொடர்பான குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தும்.
"விடுதலைப் புலிகளினதோ சிறிலங்கா அரசினதோ ஆதிக்கநிலையை இந்தியா விரும்பவில்லை."
பின்னர், அமெரிக்கா, இஸ்ரேல், பிரித்தானியா, ரஷ்யா, இந்தியா, நேபாளம், சீனா, பாகிஸ்தான், சிறிலங்கா, எகிப்து எனப் பல நாடுகள் பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டிவரும். இவை அனைத்து நாடுகளும் பயங்கரவாதத்தை நேரடியாகவோ மறைமுகமாககவே தமது தந்திரோபாயமாக பயன்படுத்தி வருகின்றன.ஆனால், இதில் எத்தனையோ இரட்டை வேடங்கள். வானூர்தியில் குண்டுவைத்ததற்காக லிபியாவின் கடாபியை தனது காலடிக்கு கொண்டுவந்துள்ள அமெரிக்கா, முன்னர் ஈரான் வானூர்திக்கு குண்டுவைத்த தனது குற்றத்துக்கு என்ன தண்டனை வைத்திருக்கின்றது?பயங்கரவாதம் என்பது இராணுவ விடயம் அல்ல. அது அரசியல் விடயம். கொள்கையற்ற உலக அரசியல் தர்மத்தின் கீழ் அமைப்புக்கள் பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்கப்படும். பின்னர், அதே தர்மத்தின் கீழ் பயங்கரவாதிகள் பட்டியலிலிருந்து நீக்கப்படும். அவ்வாறு நீக்கப்படாவிட்டாலும்கூட, பயங்கரவாதத்துக்கு எதிரான அமெரிக்கா போன்ற அரசுகளே அந்த அமைப்புக்களுடன் மறைமுகமாக பேச்சு நடத்தும். ஆயுதங்கள் வழங்கும். நிதியுதவி செய்யும்.ஈரானின் அகமட்நிஜாட் அரசை கவிழ்ப்பதற்கு 400 மில்லியன் டொலர் நிதியை ஒதுக்கியுள்ள அமெரிக்கா, தான் பயங்கரவாத அமைப்புக்களாக தடைசெய்துள்ள ஈரானிய அமைப்புக்களையே தனது இந்த திட்டத்துக்கு பயன்படுத்துவதாக நியூயோர்க்கர் பத்திரிகையில் சைமர் ஹேர்ஷ் என்பவர் அண்மையில் எழுதியுள்ளார். அமெரிக்கா கடந்த காலத்தைப் போலவே தற்போதும் ஈரானிய பயங்கரவாத அமைப்புக்களுடன்- மும்முரமாக- இணைந்து செயற்பட்டு வருகின்றது.கொள்கைகளை அரசியல் வென்று வருகின்றது.இலங்கை விவகாரம் தொடர்பாக இந்தியா காண்பிக்கும் போக்கில் தமிழ்நாட்டு அரசு செலுத்தும் செல்வாக்கு என்ன என்று கருதுகின்றீர்கள்?தமிழ்நாட்டு நிலைமை 80 களில் காணப்பட்டது போன்று இப்போது இல்லை. இந்தியாவும் தமிழ்நாடும் அந்த நிலைமையிலிருந்து மாறியுள்ளன. வன்முறை குழிக்குள் சிக்குண்டு அதிலிருந்து மீளமுடியாமல் துன்பப்படும் இலங்கைத் தமிழர்களுக்கு, காலநீட்சியால் இந்தியாவில் இப்படி ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பது தெரியவில்லை.இந்தியாவில் பெரும்பகுதி மக்கள் தமது வாழ்க்கையில் முன்னேற்றமடைந்து- முக்கியமாக மத்திய தர மக்களும் புத்திஜீவிகளும்- சுயநலமுள்ளவர்களாக மாறிவிட்டார்கள்.எவ்வாறு பணம் சம்பாதிக்கலாம் என்று நிலையிலேயே இன்று ஒவ்வொரு சராசரி இந்தியக் குடிமகனும் உள்ளான். இந்தியாவிலோ நேபாளத்திலோ ஏன் இந்தியாவின் பின்தங்கிய இடங்களில்கூட என்ன நடைபெறுகின்றது என்பதை அறிவதில் அவர்களுக்கு பெரிய ஆர்வமொன்றும் இல்லை.இந்தியாவின் சராசரி குடிமகன் ஒருவர் இலங்கை விடயத்தில் காண்பிக்கும் ஆர்வத்திலும் பார்க்க, மன்மோகன் சிங் அதிகம் ஆர்வம் காண்பிக்கின்றார் என்று நான் கூறுவேன்.அதற்கு ஊடகங்களும்தான் காரணம். ஏனைய நாடுகளில் காணப்படுவதைப் போலவே இந்தியாவிலும் ஊடகங்கள், நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த ஊடகங்கள் அற்ப விடயங்களான துடுப்பாட்டம், திரைப்படம், நட்சத்திரங்களின் வாழ்க்கை முறை போன்றவற்றுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன.உண்மையான, முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டிய விடயங்களுக்கு இந்திய ஊடகங்கள் அளிக்கும் முன்னுரிமைக்கும் அவற்றுக்கு உண்மையில் எவ்வாறான முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்ற நிலைமைக்கும் இடையில் பெரிய இடைவெளி காணப்படுகின்றது.ஊடகங்களைப் பொறுத்தவரை அவை தனது பயனாளர்களை திருப்திபடுத்துகின்றனவே தவிர சராசரி குடிமகனை அல்ல.இலங்கை மற்றும் அனைத்துலக நிலைமை குறித்த விடுதலைப் புலிகளின் சிந்தனை, பார்வை தற்போது என்ன என்று நீங்கள் கருதுகின்றீர்கள்?உங்களுக்கே தெரியும் விடுதலைப் புலிகளின் சிந்தனை என்று ஒன்றும் இல்லை. பிரபாகரனின் சிந்தனை மட்டும் தான். அதுவே விடுதலைப் புலிகளின் சிந்தனை.இன்றைய உலகில் முழுமையான ஒழுக்கத்துடனும் தனது தலைமைக்கு விசுவாசமாகவும் ஒரு விடுதலை அமைப்பு உள்ளதென்றால் அது விடுதலைப் புலிகள் இயக்கம் ஒன்றேதான்.பிரபாகரன் திறமையான இராணுவ திட்டவகுப்பாளர் மட்டுமல்ல. அவர் அரசியலிலும் நுணுக்கமாக ஆராய்ந்து முடிவெடுக்க வல்லவர். அனைத்துலக அரசியல் பற்றிய ஆழமான அறிவு உடையவர். முக்கியமாக, மாறுகின்ற அனைத்துலகத்தின் போக்கு தமிழர்களின் போராட்டத்தை எவ்வாறு நேரடியாக பாதிக்கும் என்பதை புரிந்துகொள்வது தொடர்பில் பிரபாகரனுக்கு தீர்க்கமான ஞானம் உண்டு.இதனை நாம் முன்னரும் கூறியுள்ளேன். எண்பதுகளில் விடுதலைப் புலிகளும் ஏனைய அமைப்புக்களும் இந்தியாவின் உயர் உதவிகளைப் பெற்றுவந்தன."இப்போது நாம் இந்தியாவின் உதவியைப் பெற்றுவந்தாலும் இதே இந்தியாவை எதிர்த்துப் போராடவேண்டிய ஒரு காலம் எமக்கு வரும்" - என்று பிரபாகரன் என்னிடம் கூறியிருந்தார்.இந்தப் பதிலால் திகைத்துப்போன நான் "ஏன்" என்று அவரிடம் கேட்டபோது -"சுதந்திர தமிழீழம் அமைவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது. அப்படி அமைந்தால், அது இந்தியாவில் உள்ள தமிழ்மக்கள் பிரிந்து செல்வதை ஊக்குவிக்கும் காரணியாக அமைந்துவிடும் என்ற அச்சம் இந்திய அரசுக்கு உண்டு." என்றார்.அமெரிக்காவின் மனநிலை குறித்தும் பிரபாகரனுக்கு நன்கு தெரியும்.பல நாடுகளை அனுபவித்துக்கொண்டிருக்கும் அமெரிக்கா, இலங்கையிலும் அதனைத்தான் செய்கின்றது.பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற பெயரில் பெரும் அழிவுடன் கூடிய பாரிய போரை உலகளாவிய ரீதியில் புஷ் அரசு ஆரம்பித்திருந்தது. புஷ்ஷினது இந்தப் போர் உள்ளவரை தனது இலக்கை நோக்கிய பாதையில் எதையும் அடையமுடியாது என்று பிரபாகரன் உணர்ந்துகொண்டார்.புஷ்ஷினது ஆட்சி முடியும்வரை விடுதலைப் புலிகள் அமைதியாக காத்திருப்பார்கள் என்று 2001 இலேயே நான் எதிர்வு கூறியிருந்தேன். எனது கூற்றுப் பலித்திருக்கின்றது. 2009 ஜனவரியுடன் புஷ் ஆட்சி இழக்கின்றார். அடுத்து, ஒபாமா ஆட்சிக்கு வந்தால், வித்தியாசமான அமெரிக்காவையே நாம் பார்ககமுடியும்.உலகளாவிய ரீதியில்- கடந்த எட்டு வருடங்களில்- அமெரிக்கா பலமிழந்துள்ளதையும் அதன் பிரபலம் அற்றுப்போயுள்ள நிலைமையையும் நாம் தெளிவாக பார்க்கின்றோம். ஆதிக்க நிலையிலிருந்த அமெரிக்க வல்லரசின் போக்கு இனிவரும் ஆண்டுகளில் பலமிழந்து காணப்படும்.வர்த்தக நெருக்கடிகள், ஆப்கானிலும் ஈராக்கிலும் மேற்கொண்ட குழப்பான போர் நடவடிக்கை, மனதளவில் சோர்ந்துபோயுள்ள நாட்டுமக்கள் போன்ற விடயங்களினால் அமெரிக்கா பெரிய சிக்கலை எதிர்நோக்கியிருக்கின்றது. அத்துடன், மீண்டும் எழுச்சி கொள்ளும் ரஷ்யா, புத்தெழுச்சி கொள்ளும் சீனா, இந்தியா, பிறேசில் ஆகியவையும் அமெரிக்காவுக்குப் பெரும் சவால்களாக அமைந்துள்ளன.21 ஆம் நூற்றாண்டில் வித்தியாசமான உலகத்தை பார்க்கப்போகின்றோம் என்பதையே இவை கோடி காட்டுகின்றன.இந்த உலக அரசியல் மாற்றங்களை மதிப்பீடு செய்து, அடுத்த ஆண்டுதான் பிரபாகரன் தனது நகர்வினை மேற்கொள்வார் என்று நான் நினைக்கிறேன்.தமிழ் மக்களின் போராட்டம் மற்றும் அவர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் ஆகியவை தொடர்பான செய்திகளை தவிர்க்கம் மேற்குலக ஊடகங்கள் குறித்து அவற்றுடன் இணைந்து பல காலம் பணியாற்றி வருபவர் என்ற ரீதியில்- நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?மேற்குலக ஊடகங்கள்- முக்கியமாக அமெரிக்க மற்றும் பிரித்தானியா- தமது அரசுக்கு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களாக கருதும் செய்திகளையே கவனத்தில் கொள்கின்றன. அதுதான், அவர்கள் ஆப்கான் மற்றும் ஈராக் குறித்த செய்திகளை கவனிக்கின்றார்கள்.இலங்கையில் உள்ள தமிழர்களின் பிரச்சினை என்பது மேற்குலக ஊடகங்கள் சார்ந்த அரசுகளுக்கு முக்கியமான விடயம் அல்ல.அங்குள்ள ஊடகங்கள் அரச அமைப்பின் ஒரு பகுதியே ஆகும். ஆகவே, அதில் அவர்கள் பிழை விடமாட்டார்கள். அதற்காக அங்கு ஊடக சுதந்திரம் இல்லை என்று கூறமாட்டேன். ஏனைய நாடுகளை விட அங்கு அதிக ஊடக சுதந்திரம் உள்ளது.
"பயங்கரவாதம் என்பது இராணுவ விடயம் அல்ல. அது அரசியல் விடயம்."
ஆகவே, வெளிவிவகார கொள்கைகள் மற்றும் இராணுவ- அரசியல் விவகாரங்கள் என்று வரும்போது அந்த நாட்டு அரசுகளுடன் இந்த ஊடகங்கள் மிக நெருக்கமாகவே செயற்படுகின்றன.அந்த நாட்டு அரசுகளும் தமது போர் மற்றும் வெளிவிவகார இலக்குகளை அடைவதற்கு இந்த ஊடகங்களை மறைமுகமான கருவியாக பயன்படுத்திக்கொள்கின்றன.ஈராக் போரின் ஆரம்பத்தில் அதனை மேற்குலக ஊடகங்கள் எவ்வாறு கையாண்டன என்பது இதற்கு நல்ல உதாரணம். புஷ்ஷினது பிரசாரத்தை அப்படியே விழுங்கிவிட்டு வாந்தி எடுத்தது போலவே அப்போது மேற்குலக ஊடகங்கள் செயற்பட்டன.இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு எதிராக அரசு மேற்கொண்டுள்ள அடக்குமுறை குறித்து ஊடகவியலாளர் என்ற வகையில் உங்கள் கருத்து என்ன?வளர்ச்சியடைந்த சமூகங்கள், ஊடகவியலாளர்களுக்கு எதிரான தாக்குதல்களை பார்த்துக்கொண்டு பொறுமை காக்கவே கூடாது. நாட்டின் குடிமக்கள் இந்த தாக்குதல்களுக்கு எதிராக குரல் எழுப்பவேண்டும்.அத்துடன் பாதிக்கப்பட்ட இந்த ஊடக அமைப்புக்கள், ஊடக சுதந்திரத்தை பாதுகாக்கும் எல்லைகள் தாண்டிய ஊடக இயக்கம் மற்றும் அமைப்புக்கள் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டு தமது முறைப்பாடுகளை பதிவுசெய்ய வேண்டும். அப்போதுதான், இந்த அமைப்புக்கள் அரசாங்கத்துடன் தொடர்புகொண்டு நடவடிக்கை எடுக்கமுடியும்.ஊடகவியலாளர்களுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தும் குழுக்களுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் தேசிய அளவிலும் அனைத்துலக அளவிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். ஊடகவியலாளர்களை பாதுகாப்பது வளர்ச்சியடைந்த நாடு ஒன்றின் அடிப்படை கடமை.அதேவேளை, அரசியலில் தலையிடாமல் தனது பணியைச் செய்வது ஊடகவியலாளரின் அடிப்படைக் கடமை. இப்போதெல்லாம், ஊடகவியலாளர்கள் கட்சிகளின் பேச்சாளர்களாக செயற்படும் நிலைமை அதிகரித்துவிட்டது. கட்சி அங்கத்தவராக இருந்துகொண்டு தான் செய்யவந்த பணியைச் செவ்வனே செய்யமுடியாது. இப்படியான ஊடகவியலாளர்கள் உணர்ச்சிவசப்பட்டு மிகைப்படுத்தப்பட்ட செய்திகளையும்- பொய்களையும்- அவிழ்த்து விடுகின்றனர். கட்சி சாராமல் உண்மையாக, நேர்மையாக செயற்படுவது ஊடகவியலாளனின் அடிப்படை கடமை.நீங்கள் மீண்டும் இலங்கை செல்லவுள்ளீர்களா? இல்லை என்றால் ஏன்?இல்லை. நான் அங்கு செல்வதாக இல்லை. நான் உங்களுக்கு முன்னர் கூறியது போன்று ஊடகங்களுக்கு இலங்கையில் நாட்டம் இல்லை.ஆனால், என்றாவது ஒருநாள் நான் இலங்கைக்குச் சென்று பிரபாகரனை சந்தித்து அவரது வாழ்க்கை வரலாறை எழுதவேண்டும் என்ற நம்பிக்கையுடன் உள்ளேன்.எனது வாழ்க்கையில் நிறைவேறாமல் உள்ள சில கனவுகளில் அதுவும் ஒன்று.எமது காலப்பகுதியில் உள்ளதொரு மிக முக்கியமான கெரில்லாத் தலைவர் பிரபாகரன் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.அவரது மனதை எந்த எழுத்தாளரையும்- ஊடகவியலாளரையும்- விட நான் அதிகம் புரிந்துகொள்வேன் என நினைக்கிறேன்.பிரபாகரனின் வாழ்கை வரலாறை தமிழ்மக்கள் மட்டுமல்லாமல் முழு உலகமும் ஆழமாக புரிந்துகொள்ளக்கூடிய வகையிலும் அவர்களை ஈர்க்கும் வகையிலும் நான் எழுதுவேன்.