Friday, October 24, 2008

உலக கண்ணழகி ஐஸ்!


உலகிலேயே கவர்ச்சியான கண்ணழகி என்ற பெருமையைப் பெற்றுள்ளார் முன்னாள் உலக அழகியும், இந்நாள் நம்பர் ஒன் நடிகையுமான ஐஸ்வர்யாராய் பச்சன்.

இந்திய அழகின் பிரதிநிதியாக உலகமெங்கும் உலா வந்து கொண்டிருப்பவர் ஐஸ்வர்யா ராய்.

'இந்திய சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அடுத்து உலகமெங்கும் அதிக ரசிகர்களைக் கொண்டுள்ள இந்தியக் கலைஞர் இவர் மட்டும்தான்' என்கிறது ஆசியா வீக் பத்திரிகை. இவரது மாமனார் அமிதாப்புக்குக் கூட அடுத்த இடம்தான் (நடிப்பில் அல்ல... பாப்புலாரிட்டியில்!)

உலக அழகி பட்டம் பெற்ற பின்னர் திரையுலகில் நுழைந்து பல வெற்றிப் படங்களில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராயின் கண்கள் தான் உலகிலேயே மிகவும் கவர்ச்சியான கண்கள் அறிவித்துள்ளது யுஎஸ் டிவி நிறுவனம்.

இந்த நிறுவனம் சமீபத்தில் உலகிலேயே கவர்ச்சியான உடல் பாகங்கள் கொண்டவர்கள் யார் என்று வாக்கெடுப்பினை நடத்தியது.

இதில் பார்ப்பவர்களை வசீகரிக்கும் கவர்ச்சியான கண்களைக் கொண்டவர் என்ற பிரிவில் ஐஸ்வர்யா ராய் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

பிரபல ஹாலிவுட் நடிகைகள் ஏஞ்சலினா ஜூலி, மேகன் பாக்ஸ், ஸ்கார்லெட் ஜோகன்சன் ஆகியோரது கண்களை விட கவர்ச்சியாக உள்ளது ஐஸ்வர்யாவின் என்று பிரபலங்கள் பலரும் பாராட்டியுள்ளனர்.

கவர்ச்சியான கால்களுக்குச் சொந்தக்காரர் என்ற பட்டத்தை பிரேசில் நாட்டின் மாடல் அழகி கிசிலி பண்ட்சென்னுக்கு அளித்துள்ளனர் இந்த டிவியின் பார்வையாளர்கள்.

தைவான் நாட்டின் ஷூ கி, ஏஞ்சலினா ஜூலியை விட கவர்ச்சியான உதட்டுகளைக் கொண்டவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

0 comments: