Thursday, December 4, 2008

பராக் ஒபாமாவால் சுயாதீனமாக செயற்பட முடியுமா?

ஒரு நாட்டின் வெளியுறவுக் கொள்கை என்பது அந் நாட்டின் ஆட்சி நிர்வாகத்திற்கு மிக முக்கியமானதாகும். அந்த வெளியுறவுக் கொள்கையின் நிலையைத் தீர்மானிப்பதில் வெளியுறவு அமைச்சரின் பங்கு செல்வாக்குச் செலுத்துகிறது.

உலகின் பொலிஸ்காரன் என தன்னை நினைத்துக் கொள்ளும் அமெரிக்காவில் 2009 ஜனவரியில் புதிதாக கறுப்பின தலைவர் பராக் ஒபாமா பதவியேற்கவுள்ளார். இவரது அமைச்சரவையில் வெளியுறவு அமைச்சராக முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டனின் மனைவியும், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜனநாயகக் கட்சி சார்பில் ஒபாமாவை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோல்வி கண்டவருமான ஹிலாரி கிளின்டன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந் நியமனமானது அரசியல் நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாக அரசியல் அவதானிகள் மத்தியில் சந்தேகம் நிலவுகிறது. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக ஒரே கட்சியில் எதிர்த்துப் போட்டியிட்டவரை மிக முக்கியமான பதவியில் அமர்த்தி விட்டு இணைந்து செயற்படுவதென்பது மிகவும் கடினமான செயலாகவே கருதப்படுகிறது.

ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷின் ஆட்சிக்காலத்தில் கறுப்பினத்தனவரான கொண்டலீசா ரைஸ் வெளியுறவு அமைச்சராக உள்ளார். சில சமயத்தில் ஒபாமா கறுப்பினத்தவராக இருப்பதால் தனது ஆட்சிக்காலத்தில் வெள்ளையினத்தவர் ஒருவரை வெளியுறவு அமைச்சராக நியமிக்க எண்ணியிருக்கலாம்.

எவ்வாறாயினும்ம், ஒட்டுமொத்த அமெரிக்காவின் வெளியுறவு நிலைமையில் பாரிய மாற்றங்களை எதிர்பார்க்க முடியாது.

0 comments: