Wednesday, December 3, 2008

சினிமா தயாரிப்பாளரின் வயிறோ கலங்குகிறது

கலைஞருக்கு, ஸ்டாலின் அழகிரிஎன்ற கண்கள் பணித்ததாம். இதயம் கலாநிதியை மன்னித்ததாம்!!!
கலைஞருக்கு கண்கள் பனித்தது; இதயம் இனித்தது; சினிமா தயாரிப்பாளரின் வயிறோ கலங்குகிறது.;இவர்களை நம்பி கட்சி கட்டிக் கொடிபிடித்தவர்கள் கோவணமுமில்லாது போனார்கள்.பிரிந்து கொண்ட தொலைகாட்சிகளின் கதி? தாத்தாவும் பேரன்களூம் ஓன்று சேர்ந்துவிட்டார்கள்.. ஆனால் தாத்தாவும், அவரது மகனும், சொன்னதின் பேரில் அவர்களுக்கு போட்டியாய் தொழிலில் இறக்கி விடப்பட்டவர்கள் என்னாவார்கள்..?இந்த சந்திப்பை வெற்றிகரமாய் சாதித்த பங்கு அழகிரிக்கும், ஸ்டாலினுக்கும் உண்டு என்றார் கலைஞர்.. தமிழ்நாட்டு மக்களுக்கு எவ்வளவு முக்கியமான சந்திப்பு.. இவர்கள் சந்திப்பால் தமிழகம் செழித்தோங்க போகிறதோ..? வைகை தமிழ் நாட்டுக்குள் பாய்ந்து வரப் போகிறதா?? ஈழத்தமிழனின் தலயில் விழும் குண்டுகள் நிறுத்தப் படுமா?அனாவசியமாக தினகரன் பத்திரிக்கை அலுவலகத்தில் இறந்த அல்லது அழகிரியாட்களால் கொல்லப்பட்டதாகச் சொல்லப்படும் மூன்று பேரின் உயிர்களும் வந்து விடுமா ?வழக்கமாய் கலைஞர் குடும்பத்திற்கு ஓரு வழக்கம் உண்டு, அதாவது அவர்களுக்கு உதவியவர்களை முடிந்த வரை உபயோகப்படுத்திக் கொண்டு பின்பு தேவையில்லையெனில் கழட்டிவிடுவது, அதையே அவரது பேரன்களும் செய்யவே கோபம் வந்து பிய்த்து கொண்டார்களாம்... அவர்களுக்கும் வேறு வழியில்லை.. என்ன செய்வது.. வாய்விட்டே சொல்லியும் விட்டாராம் கலைஞர் தனக்கு "ரவுண்டாய்"க் கொடுக்கவில்லை என்று.. ஓரு வேளை இப்பொழுது ரவுண்டாய்க் கொடுத்துவிட்டார்கள் போலிருக்கிறது.. அவர்கள் சிறந்த வியாபாரிகள் என்பதை மீண்டும் ஓரு முறை நிருபித்திருக்கிறார்கள். கொடுக்க வேண்டியதை கொடுத்து அவர்களின் வங்கி வைப்புகள் கனத்ததால் தானோ என்னவோ கலைஞரின் கண்கள் பனித்தது.. இதயம் கனத்ததோ..? எது எப்படியோ?? இந்தக்கூட்டுறவால் நன்மை நிகழ்ந்தால்ச் சரி.

1 comments:

Leo Durval said...

simplicidade, mistica