Wednesday, December 31, 2008

புத்தாண்டு வாழ்த்துகள் தேவைதானா இப்பொழுது?

புத்தாண்டு வாழ்த்துகள் தேவைதானா இப்பொழுது? உலகெங்கும் மோசடிகள், பொருளாதார நெருக்கடி ஒரு புறம், அதீத அறிவியல் வளர்ச்சியின் விளைவுகளின் காரணமாய் சமூகச் சீர்கேடுகள் இங்குமங்குமாய்... இந்தச் சூழலில் புத்தாண்டு வாழ்த்துகள் தேவைதானா?

தேவைதான்! விழாக்கள் பண்டிகைகள் மற்றும் வாழ்த்துகள் கூறுவது, ஒருவரையொருவர் உற்சாகப்படுத்திக் கொள்வதற்கும், நம்பிக்கை பெற்றுப் புத்துணர்வு பெறுவதற்கும்தானே? ஆகவே புத்தாண்டு வாழ்த்துகளைப் பரிமாறுங்கள். களிப்புக் கொள்ளுங்கள். இவற்றால் நம்பிக்கையும் புத்துணர்வும் கொண்டு, மேற்கூறும் சவால்களை வெல்லுங்கள். புத்தாண்டு கொண்டாடுவதால் எந்தவொரு சிரமும் அடுத்தவர்க்கு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். புத்துணர்வோடு 2009ஐ எதிர்கொள்வோம் வாருங்கள்!
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

0 comments: