Sunday, February 8, 2009

வன்னியிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கு அரசாங்கம் உத்தரவு

வன்னியிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கு அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வன்னிப் பிரதேசத்தில் கடமையாற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊழியர்கள் உடனடியாக குறித்த பிரதேசத்தை விட்டு வெளியேற வேண்டுமென கூட்டுப்படைகளின் கட்டளைத் தளபதி டொணால்ட் பெரேரா தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளை 96 கிலோ மீற்றர் பரப்பிற்குள் மட்டுப்படுத்தியுள்ளதாகவும், குறித்த பிரதேசத்தில் இயங்கும் செஞ்சிலுவைச் சங்க ஊழியர்களுக்கு பாதுகாப்பளிக்க முடியாதெனவும் அவர் கடிதம் ஊடாக அறிவித்துள்ளார். குறித்த பிரதேசத்தில் கடமையாற்றும் மூன்று அதிகாரிகள் விடுதலைப் புலிகளுக்கு தேவையான வகையில் செயற்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

0 comments: