Sunday, February 8, 2009

முல்லைத்தீவு கடற்பரப்பில் கடற்புலிகள் வலிந்த தாக்குதல்: சூப்பர் டோரா மூழ்கடிப்பு: 15 கடற்படையினர் பலி

முல்லைத்தீவில் இருந்து 52 கடல் மைல் தொலைவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் அணி நடத்திய வலிந்த தாக்குதலில் சிறிலங்கா கடற்படையின் சூப்பர் டோரா மூழ்கடிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் ஒரு சூப்பர் டோரா கடுமையான சேதங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இதில் 15 கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:
முல்லைத்தீவில் இருந்து 52 கடல் மைல் தொலைவில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 5:30 நிமிடம் தொடக்கம் 6:00 மணி வரை சிறிலங்கா கடற்படையினர் மீது கடற்புலிகள் தாக்குதல் நடத்தினர்.
இதில், கடற்படையினரின் சுப்பர் டோரா கடற்கரும்புலிகளின் தாக்குதலில் முற்றாக மூழ்கடிக்கப்பட்டுள்ளதுடன் அதில் இருந்த 15 கடற்படையினரும் கொல்லப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து, கடற்புலிகள் நடத்திய தாக்குதலில் கடற்படையினரின் மற்றொரு சூப்பர் டோரா கடுமையான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.
இம்மோதலில் கடற்புலிகள் நால்வரும் கடற்கரும்புலிகள் இருவரும் வீரச்சாவடைந்துள்ளனர்.

0 comments: