Monday, March 9, 2009

ஈழத்துப் பாப்பாபாடல்

ஓடிமறைந்துகொள்பாப்பா-நீ

ஒளிந்துவாழப்பழகிக்கொள்பாப்பா

பங்கருக்குள்முடங்கிக்கொள்பாப்பா- நீ

பதுங்கிவாழப்பழகிக்கொள்பாப்பா

சிங்களப்படைகள்வரும்பாப்பா- வானில்

சீறும்விமானம்வரும்பாப்பா

எங்களுக்கெனக்குரல்கொடுக்கஉலகில்- மனிதர்

எவரும் இல்லையடிபாப்பா

சினத்தோடுவந்தான்எதிரிபாப்பா-எம்மை

இனத்தோடுஅழிக்கநினைத்தான்பாப்பா

வனத்தில்விலங்குகளாய்ஆனோம்பாப்பா-எம்

மனத்தில்சோகங்கள்ஆயிரம்பாப்பா

பகைவனுக்குவேண்டியதுசண்டை- அவன்

வகைவகையாய் வீசினான் குண்டை

புகைமண்டலமாய்ஆனதெம்தேசம் - பார்த்து

நகைக்கிறான்எதிரிபாப்பா

தெய்வமும்மறந்ததடிபாப்பா-வெறி

நாய்கள் சூழ்ந்ததடிபாப்பா

பொய்யும்வெல்லுதடிபாப்பா- இன்று

பேய்களின்ஆட்சியடிபாப்பா

யுத்தத்தில்வாழ்கிறோம்பாப்பா- குண்டின்

சத்தத்தில்மாய்கிறோம்பாப்பா

இரத்ததில்தோய்கிறோம்பாப்பா- நாம்

மொத்தத்தில்பாவிகளடிபாப்பா

காக்கைகுருவிஎங்கள்ஜாதி- இவற்றோடு

காட்டில்வாழ்கிறோம் பாப்பா

தேளும்பாம்பும்புடைசூழ-நாம்

நாளும்வாழ்கிறோம்பாப்பா

தமிழராய்ப்பிறந்துவிட்டோம்பாப்பா- நம்

தலைவிதிஇதுதான்பாப்பா

1 comments:

Anonymous said...

oh appadiyaa!