Sunday, March 22, 2009

இலங்கைப் பிரச்சினையை உன்னிப்பாக அவதானிக்கின்றோம் - சுவிஸ் வெளிவிவகார அமைச்சர்

சுவிஸ் வாழ் தமிழ் மக்களால் சுவிஸ் வெளிநாட்டமைச்சுக்கு அனுப்பிவைக்கப்பட்ட கோரிக்கைக்கு அவர் பதில் அனுப்பி வைத்துள்ளார்.


இலங்கையில் ஏற்பட்டுள்ள மனிதாபிமான சூழ்நிலை

இந்த மனிதாபிமான பிரச்சினை விடயமாக எம்முடன் தொடர்பு கொண்டமைக்காக முதற்கண் உங்களிற்கு நன்றி கூறிக்கொள்கிறோம்.


இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள மனிதாபிமானப் பிரச்சினை விசேடமாக வன்னியில் ஏற்பட்டிருக்கின்ற பிரச்சினையை சுவிஸ் வெளிநாட்டமைச்சு மிகவும் கூர்மையாக அவதானித்துக்கொண்டிருக்கிறது. மேற்கொண்டு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கும்,தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவேண்டிய இருதரப்பு பேச்சுவார்த்தைகள் பற்றியும் மாசி மாதம் 5 ஆம் திகதி நாம் பிரைச்சனையில் சம்பந்தப்பட்ட இருதரப்பினருக்கும் ஒரு கோரிக்கையை விடுத்திருந்தோம், அதைவிட இந்தக்கோரிக்கையை பத்திரிகைகளுக்கும் அறிவித்திருந்தோம்.

இலங்கையில் சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக மனிதாபிமானத் தேவைகள் கிடைப்பதற்கும், மனிதஉரிமைகள் மதிக்கப்படுவதற்கும் மற்றும் நீண்டு நிலைத்து நிற்கக்கூடிய ஒரு அமைதியான அரசியல் தீர்வு காண்பதற்கும் சுவிஸ் அரசாங்கம் தொடர்ந்தும் தன்னை ஈடுபடுத்தும் என தெரிவித்துக்கொள்கிறேன்.


நேசமான வாழ்த்துக்களுடன்

மிசலின் கால்மிரே
அரசாட்சியாளர்

0 comments: