Sunday, March 22, 2009

கிழக்கு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் முல்லைத்தீவை சேர்ந்த மற்றும் ஒரு மாணவி தற்கொலை

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 3 ம் ஆண்டு மாணவி ஒருவர் விடுதியில் வைத்து இன்று காலை தனக்குத் தானே தீ மூட்டி தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரின் சடலம் செங்கலடி மாவட்ட வைத்தியசாலையில் முற்பகல் 10.30 மணியளவில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த மாணவி ரவீந்திரன் சுதர்சனா ( வயது 23 ) என்ற கலைப் பீட மூன்றாம் ஆண்டு மாணவியே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.

இவர் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைச் சேர்ந்தவர் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த 4 சக மாணவிகள் மயக்கமுற்ற நிலையில் ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்கொலை குறித்த விசாரணைகளை ஏறாவூர் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இப் பல்கலைக்கழக பெண்கள் விடுதியில் கடந்த ஒரு மாத காலத்திற்குள் முல்லைத்தீவைச் சேர்ந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட இரண்டாவது சம்பவம் இதுவாகும்.

முல்லைத்தீவிலுள்ள பெற்றோர் மற்றும் உறவினர்களுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் கடந்த மாதம் 26 ம் திகதி முல்லைத்தீவைச் சேர்ந்த மற்றுமொரு மாணவி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

0 comments: