Sunday, November 30, 2008

இந்தியா...26’ : அதிர்ச்சியூட்டும் எஸ்.எம்.எஸ்.

உலகையே உலுக்கிய மும்பை தீவிரவாத தாக்குதல் சம்பவம் கடந்த இருபத்து ஆறாம் தேதி நடந்தது. இந்தியாவில் பல மோசமான சம்பவங்கள் 26 ம் தேதியில் நடந்திருப்பதை பட்டியலிட்டு சென்னையில் பல செல்போன்களிலும் ஒரு எஸ்.எம்.எஸ் உலவிக்கொண்டிருக்கிறது.
குஜராத் பூகம்பம் நிகழ்ந்தது ஜனவரி 26
இந்தியாவை சுனாமி தாக்கியது டிசம்பர் 26
கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவம் பிப்ரவரி 26,
குஜராத் பெருவெள்ளம் ஜூன் 26
மும்பையில் கடுமழை பெய்தது ஜூலை 26
அகமதாபாத் குண்டுவெடிப்பு செப்டம்பர் 26
தற்போது எட்டாவது சம்பவமாக நவம்பர் 26ல் மும்பையில் தீவரவாதிகள் தாக்குதல்
நடந்திருக்கிறது என்று சொல்லிவிட்டு,
அடுத்த 26 சம்பவம் என்னவாக இருக்குமோ என்ற அச்ச உணர்வையும் அந்த எஸ்.எம்.எஸ். வெளிப்படுத்தி இருக்கிறது.

0 comments: