
இலங்கைத் தமிழ் மண்ணில் தமிழர்கள் படுகொலை செய்வதை தடுக்க வேண்டியும், அங்கு அமைதி நிலவ வேண்டியும் போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஜான்பால்பூபதி நெல்லையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பட்டத்தை வாங்க மறுத்தார்.
ஈழத்தில் நடைபெற்றுவரும் தொடர்போரினால் ஆயிரக்கனக்கான தமிழ் மக்கள் மடிந்து வருகின்றனர். இதை உலகத் தமிழர்கள் அனைவரும் கண்டித்துவரும் வேளையில் மத்திய மாநில
அரசுகள் கண்டுகொள்ளாததன் காரணமாக பொதுமக்கள், பொது அமைப்புகள், அரசியல் கட்சிகள் பலமாதங்களாக போராட்டம் நடத்தியும் எந்த ஒரு அமைதி முடிவும் ஏற்படவில்லை.
தற்போது தமிழகம் முழுவதும் அனைத்துக் கல்லூரி மாணவ, மாணவிகள் உண்ணாநிலை மற்றும் ஆர்ப்பாட்டம் உள்ளிட்டவைகளை நடத்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்துவருகின்றனர். ஈழத் தமிழர் விசயத்தில் படுகொலையை கண்டித்து கடந்த 30.01.2009 அன்று தூத்துக்குடி கொள்கை நல்லூரைச் சேர்ந்த இளைஞர் முத்துக்குமரன் சென்னை சாஸ்திரிபவன் அருகே உயிர்நீத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கைத் தமிழர் படுகொலைக்காக மாணவ, மாணவிகள் பல்வேறு வகையான போராட்டங்களை ஈடுபட்டு வரும் வேளையில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ராமையன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஆரோக்கியசாமி என்பவரது மகன் ஜான்பால்பூபதி பாளையங்கோட்டை ஜான்ஸ் கல்லூரியில் பி.ஏ. ஆங்கில இலக்கியம் படித்து அதற்காக நேற்று நெல்லை பாளை சேவியர் கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைகழக துணைவேந்தர் சபாபதி மோகனிடம் இலங்கைத் தமிழர் படுகொலையைக் கண்டித்து தான்படித்த பட்டத்தை வாங்க மறுத்தார்.
இதுகுறித்து துணைவேந்தர் சபாபதி மோகன் மாணவர் ஜான்பால்பூபதியிடம் எதனால் பட்டத்தை வாங்க மறுக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் தினந்தோறும் மாண்டுவருகிறார்கள். அதனால் பட்டம் பெற விருப்பமில்லை என்று தெரிவித்தார். இலங்கையில் இரண்டு அரசுகளின் சார்பில் சமாதானம் ஏற்பட்டபின் பட்டத்தைப் பெற்றுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
பட்டம் வாங்க மறுத்த ஜான்பால்பூபதி தனது தந்தை கூலி வேலை செய்து என்னைக் கஷ்டபட்டு படிக்க வைத்து எனது குடும்பத்தில் முதல் பட்டம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது, என்று என்று கூறியது மாணவர்களிடையேயும் பொதுமக்களிடையேயும் மிகப்பெரிய தமிழ் உணர்வு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment